News March 20, 2024
வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
Similar News
News October 21, 2025
அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: நயினார்

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில், வெறும் காணொலி கூட்டங்களோடு நிறுத்திவிடாது, போர்க்கால அடிப்படையில் போதிய முன்னேற்பாடுகளை செய்யவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், மீட்பு பணிகளில் அரசுடன் இணைந்து பாஜக உறுதுணையாக களப்பணியாற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.
News October 21, 2025
உங்க மூஞ்சில Barber கோடு போட்டுட்டா?

கடையில் ஷேவ் பண்ணும் போது பார்பர் முகத்தில் கோடு போட்டுட்டா, நஷ்ட ஈடு வாங்கலாம் தெரியுமா? இதுக்கு பேரு ‘Deficiency of service’. அதாவது, தொழிலில் குறைபாடு. இப்படி கோடு விழுந்தால், Influencer-கள், யூடியூபர்கள் போன்றோர் பிஸினஸை இழக்கலாம். வழக்கு தொடர்ந்தால் வழக்கின் செலவு உள்பட நஷ்ட ஈடு கிடைக்கலாம். இதற்கு வீடியோ ஆதாரம் & இந்த பாதிப்பால் எவ்வளவு நஷ்டம் ஏற்பட்டது போன்ற தகவல்களை சேகரிக்கவும்.
News October 21, 2025
25 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்

இன்று இரவு 10 மணி வரை, சென்னை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சி, மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், அரியலூர், கோவை, திண்டுக்கல், குமரி, மதுரை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, விழுப்புரம், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை ஆகிய 25 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. இரவில் வெளியே செல்பவர்கள் கவனமா இருங்க. உங்க ஊரில் மழையா?