News March 20, 2024
வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
Similar News
News November 6, 2025
BREAKING: இந்த கட்சியுடன் விஜய் கூட்டணியா?

தவெக பொதுக்குழுவில் விஜய்க்கு முழு அதிகாரம் வழங்கப்பட்ட நிலையில், அமமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி பேச்சை தொடங்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து டிடிவியிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தவெக எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதா என்பதை பொதுவெளியில் சொல்ல முடியாது என்று பதிலளித்தார். மேலும், விஜய் தலைமையில் ஒரு கூட்டணி அமையும்; அது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 6, 2025
தேதி குறிச்சாச்சு.. விரைவில் ரஷ்மிகாவுக்கு கல்யாணம்!

விஜய் தேவரகொண்டா- ரஷ்மிகா மந்தனா இருவருக்கும் கடந்த அக்டோபர் 3-ம் தேதி, நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாக கூறப்பட்டது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பே இன்னும் வெளியாகாத நிலையில், அவர்களின் திருமண தேதி குறித்த தகவலும் வெளிவந்துவிட்டது. அடுத்த வருடம், பிப்ரவரி 26-ம் தேதி, ராஜஸ்தானின் உதய்பூர் மாளிகையில் இருவரும் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
News November 6, 2025
தனது ஆட்சி பற்றி தானே புகழ்ந்த டிரம்ப்

USA-வில் டிரம்ப் ஆட்சி அமைந்து ஓராண்டு ஆகிறது. இதனை கொண்டாடிய டிரம்ப், தான் வெற்றி பெற்றதன் மூலம் USA-வில் சுயாட்சி மீட்டெடுக்கப்பட்டதாக பேசியுள்ளார். அத்துடன், இந்த ஆட்சியும் மக்களும், பொருளாதாரத்தை காப்பாற்றி, சுதந்திரத்தை மீட்டதன் மூலம், நாட்டையே ஒன்றிணைந்து காப்பாற்றினோம் என தெரிவித்தார். மேலும், நியூயார்க்கில் குடியரசுக் கட்சி தோல்வியடைந்தது குறித்து கவலைப்பட தேவையில்லை என்றார்.


