News March 20, 2024
வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
Similar News
News November 13, 2025
இன்று ஒரே நாளில் ₹9,000 விலை உயர்ந்தது

வெள்ளி விலை இன்று(நவ.13) ஒரே நாளில் கிராமுக்கு ₹9 அதிகரித்துள்ளது. கிராம் ₹182-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,82,000-க்கும் விற்பனையாகிறது. சர்வதேச சந்தையில் கடந்த மாதம் சரிந்த வெள்ளியின் விலை, மீண்டும் உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் மீண்டும் அந்தப் பக்கம் திரும்பியுள்ளதே விலை உயர்வுக்கு காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இனி வரும் நாள்களிலும் வெள்ளி விலை உயர வாய்ப்புள்ளதாம்.
News November 13, 2025
இந்த ஆப்பிள் விலை ₹10 கோடி.. ஆனா சாப்பிட முடியாது!

இது மரத்தில் காய்த்த ஆப்பிள் கிடையாது. மும்பையை சேர்ந்த ரோஹித் பிசால் என்பவரின் கைவண்ணத்தில் உருவானது. தங்கமும் வைரமும் கொண்டு இழைக்கப்பட்டுள்ள இது, தாய்லாந்தின் Royal Palace-ல் வைக்கப்பட்டுள்ளது. 1,936 சிறிய ரக வைர கற்களும், 9 கேரட் & 18 கேரட் தங்கத்தினாலும் இந்த ஆப்பிள் செய்யப்பட்டுள்ளது. வெறும் 29.8 கிராம் தான் என்றாலும், இதை வாங்கும் விலைக்கு கிட்டத்தட்ட 4 BMW கார்களை வாங்கி விடலாம்.
News November 13, 2025
BREAKING: டாஸ்மாக் அறிவித்தது

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு, அதில் தலையிட முடியாது என டாஸ்மாக் நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. TN-ல் 4,787 டாஸ்மாக் கடைகளில், 25,000-க்கும் மேற்பட்டோர் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், வரும் 16-ம் தேதி தலைமைச்செயலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


