News March 20, 2024
வேட்புமனு தாக்கல் செய்ய விதிகள் என்னென்ன?

தமிழ்நாட்டில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக்கவுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனு தாக்கல் விதிகள்: காலை 11 முதல் மாலை 3 மணி வரை தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் வேட்பு மனுக்களை அளிக்கலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் சேர்த்து 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதி. தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டருக்குள் 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
Similar News
News April 27, 2025
பஹல்காம் தாக்குதல்: முஸ்லீம் மதத்தை துறந்த ஆசிரியர்

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, ஆசிரியர் ஒருவர் முஸ்லீம் மதத்தை கைவிடுவதாக அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சபீர் உசேன், ‘மதத்தால் ஏன் ஒருவர் கொல்லப்பட வேண்டும். தொடர்ந்து மதம் வன்முறைக்கு ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது என்பதை பார்க்கிறேன். இனியும் இதை பொறுத்துக் கொள்ள முடியாது’ என தெரிவித்துள்ளார். இனி நடுநிலை வகித்து மனிதகுலத்தை மட்டுமே பின்பற்ற போவதாகவும் அவர் சொல்கிறார்.
News April 27, 2025
ஆசை வார்த்தை கூறி வீழ்த்த முடியாது.. திருமா உறுதி

பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் விசிக இடம்பெறாது என்று திருமாவளவன் அறிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என்ற ஆசை வார்த்தை கூறி தன்னை வீழ்த்த முடியாது என்றும், அதிமுகவைத் தொடர்ந்து, விஜய் கட்சி திறந்து வைத்த கதவையும் தாம் மூடி விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். திமுக கூட்டணியிலுள்ள விசிக, தேர்தலுக்கு முன் அணி மாறும் என கூறப்பட்ட நிலையில் திருமாவளவன் இவ்வாறு கூறியுள்ளார்.
News April 27, 2025
J&K : தீவிரவாதிகளால் ஒருவர் சுட்டுக்கொலை

J&K-ன் குப்வாரா மாவட்டத்தின் கண்டி காஷ் பகுதியில், தனது வீட்டில் இருந்த சமூக செயற்பாட்டாளர் குலாம் ரசூல் மாக்ராய் (45) தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இருப்பினும், இதற்கான காரணம், என்ன நடந்தது என்பது குறித்த தகவல்கள் இல்லை. பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு பாதுகாப்புப் படையினர் எல்லைப் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வரும் நிலையில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது.