News May 30, 2024

எக்ஸிட் போலுக்கான நிபந்தனைகள் என்ன?

image

வாக்காளர்கள் மீது கருத்துக்கணிப்புகள் ஆதிக்கம் செலுத்துவதைத் தடுக்க, தேர்தல் ஆணையம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது. அதன்படி, கடைசிக்கட்ட வாக்குப்பதிவு முடிந்த பிறகே, Exit Poll முடிவுகளை வெளியிட முடியும். கருத்துக்கணிப்பு நடத்தும் ஊடகங்கள் சார்புதன்மையற்ற செயல்முறையை உறுதி செய்வதோடு, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்வதும் கட்டாயம். கருத்துக்கணிப்பு நடத்துவதற்கான காலத்தை ஆணையம் ஒழுங்குப்படுத்தும்.

Similar News

News October 27, 2025

3 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

image

புயல் பாதிப்பு எதிரொலியாக சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.28) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக அந்தந்த கலெக்டர்கள் அறிவித்துள்ளனர். செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மழை பெய்வதால் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. மொன்தா புயல் நாளை தீவிர புயலாக மாறி கரையை கடக்க இருப்பதால், கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

News October 27, 2025

ராசி பலன்கள் (28.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News October 27, 2025

SIR நடவடிக்கை: TN அரசியல் கட்சிகளுடன் EC ஆலோசனை

image

தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையம் வரும் 29-ம் தேதி ஆலோசனை நடத்தவுள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்படவுள்ளது. இதில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாதக, விசிக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

error: Content is protected !!