News March 16, 2024
தண்ணீர் பஞ்சத்தால் IT ஊழியர்களுக்கு ‘WFH’

பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதால், IT ஊழியர்கள் Work From Home வாங்கிக் கொண்டு சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். தண்ணீர் பஞ்சத்தால் மக்கள் அல்லாடி வரும் சூழலில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள் இயற்கை உபாதையை கழிக்க அருகிலுள்ள மால்களை தேடிச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், நிலைமை சரியாகும் வரை வீட்டிலிருந்து பணிபுரிய ஐடி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர்.
Similar News
News July 5, 2025
பொன்முடிக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் எச்சரிக்கை

பொன்முடிக்கு எதிரான வழக்கில் புலன் விசாரணை செய்ய போலீசார் தயங்கினால், சிபிஐ-க்கு மாற்றப்படும் என்று ஐகோர்ட் எச்சரித்துள்ளது. பெண்கள் & சைவ – வைணவ சமயங்கள் குறித்து பொன்முடி சர்ச்சையாக பேசியது தொடர்பாக தமிழகம் முழுவதும் 112 புகார்கள் அளிக்கப்பட்டது. ஆனால், அவற்றின் மீதான புலன் விசாரணையில் எந்த முன்னேற்றமும் இல்லை. இதற்கு கண்டனம் தெரிவித்த ஐகோர்ட், விசாரணையை தீவிரப்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
News July 5, 2025
த்ரிஷா, நயன்தாரா மீது பாய்ந்த நடிகை ஸ்ரீரெட்டி

‘Me too’ புகார் கொடுத்தபோது நயன்தாரா, த்ரிஷா உள்ளிட்ட முன்னணி நடிகைகள் வாயை மூடிக்கொண்டு இருந்ததாக நடிகை ஸ்ரீரெட்டி கூறியுள்ளார். தற்போது போதைப்பொருள் விவகாரத்திலும் மவுனம் காப்பதாக அவர்களை சீண்டியுள்ளார். சினிமாவுக்கு வரும் புது நடிகைகள் பெரிய ஆட்களுடன் சண்டை போட வேண்டாம் எனவும் பிரச்னைகளை வெளியே சொல்லாமல் பிடிக்காவிட்டால் அங்கிருந்து நகர்ந்து விடுங்கள் என புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
News July 5, 2025
CSK-க்கு இந்த 3 வீரர்கள் வேண்டும்: தோனி கோரிக்கை

IPL 2025, 5 முறை கோப்பை வென்ற CSK அணிக்கு பெரும் பின்னடவைக் கொடுத்தது. இதனால் 19-வது சீசனில் கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அணி உள்ளது. இந்நிலையில், சஞ்சு சாம்சன் (RR), GT-யில் இருந்து ராகுல் தெவாட்டியா & வாஷிங்டன் சுந்தரை வாங்க வேண்டும் என சென்னை அணி நிர்வாகத்திற்கு தோனி பரிந்துரைத்துள்ளாராம். காயம் காரணமாக ருதுராஜ் விலக, தோனி கேப்டன்சி வகித்த போதிலும், அணி மோசமான தோல்விகளைச் சந்தித்தது.