News October 12, 2025
மே.வங்க வன்கொடுமை வழக்கு: 3 பேர் கைது

மே.வங்கம், துர்காபூரில் ஒடிசாவை சேர்ந்த மருத்துவ மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எதிர்க்கட்சிகள், ஆளும் திரிணாமுல் காங்., அரசை சாடி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு துணை நிற்கும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இதனிடையே, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி வலியுறுத்தி உள்ளார்.
Similar News
News October 12, 2025
தீபாவளி ஆஃபர்.. விலை மளமளவென குறைந்தது

தீபாவளிக்கு ஹூண்டாய், டாடா நிறுவனங்கள் தங்களது கார்களின் விலையை குறைத்துள்ளது. அதன்படி GST குறைப்பு மட்டுமின்றி தனியாக Tiago, Nexon, Punch கார்களுக்கு ₹30,000 தள்ளுபடி வழங்குவதாக அறிவித்துள்ளது. அதேபோல், ஹூண்டாயின் Aura ₹78,465 GST குறைப்பு + ₹43,000, Exter ₹51,158 GST குறைப்பு + ₹45,000, i20 காருக்கு ₹98,053 GST குறைப்பு + ₹55,000 சலுகை அறிவித்துள்ளதால் கார் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News October 12, 2025
அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி

அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில், பள்ளி மைதானத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பலியாகி உள்ளனர். Football போட்டியின் போது, மைதானத்தில் திடீரென உள்ளே புகுந்த 18 வயது இளைஞர், சரமாரியாக சுட தொடங்கியுள்ளார். இதில், 12 பேர் காயமடைந்த நிலையில், 4 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் துப்பாக்கிச்சூட்டில் மட்டும் சுமார் 17,000 பேர் இறப்பதாக கூறப்படுகிறது.
News October 12, 2025
கல்கி 2: தீபிகாவுக்கு பதில் ஆல்யா!

கல்கி 2-ல் தீபிகா படுகோன் கதாபாத்திரத்தில் ஆல்யா பட் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கருத்து வேறுபாடு காரணமாக தீபிகா படத்தில் இருந்து விலகினார். இதையடுத்து யார் அவரின் சுமதி கதாபாத்திரத்தில் நடிப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஆல்யா பட் நடிப்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.