News April 7, 2025
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ஆவணங்கள் சிக்கியதா?

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல காரில் இருந்து அதிகாரிகள் சூட்கேஸ் எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை முதல் அமைச்சர் நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் வீடுகளில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News October 15, 2025
₹2,000 உதவித்தொகை.. வந்தது முக்கிய அப்டேட்!

PM Kisan திட்டத்தில் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகள் பயன் பெறுகின்றனர். குடும்பத்தில் ஒருவர் தான் உதவித்தொகை பெற முடியும் என்ற விதிக்கு மாறாக, 31 லட்சம் பேர் முறைகேடாக பணம் பெற்று வருவதாகவும், அவர்களை நீக்கும் பணியை அரசு தொடங்கி உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 21-வது தவணைக்கான ₹2,000 தீபாவளிக்கு முன்பாகவே, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 15, 2025
சங்கிலியை இழுத்தால் Train நிற்பது எப்படி?

ரயிலுக்கு அடியில் மிக நீளமான பைப் ஒன்று செல்கிறது. இந்த பைப்பில் காற்று நிறைந்திருப்பதால் அதன் அழுத்தத்தில் ரயில் நகர்கிறது. ஆனால் இந்த சங்கிலியை இழுக்கும்போது, ஒரு சிறிய துளை உருவாகி அந்த பைப்களில் உள்ள காற்று வெளியாகிறது. இதனால், ஏதோவொரு கோளாறு ஏற்பட்டிருப்பதை புரிந்துகொள்ளும் மெஷின் ஆட்டோமேட்டிக்காக அனைத்து பிரேக்களையும் அழுத்தி ரயிலை நிறுத்துகிறது. 99% பேருக்கு தெரியாத தகவலை SHARE பண்ணுங்க.
News October 15, 2025
கரூர் துயரத்திலும் திமுக அரசியல் செய்கிறது: EPS

கரூர் துயரத்தையொட்டி சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் கருப்பு பட்டை அணிந்து வந்தனர். இதனை பார்த்த சபாநாயகர் என்ன ரத்த கொதிப்பா என கேட்டதற்கு, EPS கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் ஒரு திறனற்ற அரசின் அலட்சியத்தால் 41 உயிர்களை இழந்த கோபத்தில் ரத்தம் கொதித்து தான் கருப்பு பட்டை அணிந்தோம் என பதிலடியும் கொடுத்துள்ளார். துயரத்தில் கூட திமுக அரசு அரசியல் செய்கிறது எனவும் குற்றம்சாட்டியுள்ளார்.