News April 7, 2025
அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ஆவணங்கள் சிக்கியதா?

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சோதனையில் சிக்கிய ஆவணங்களை எடுத்து செல்ல காரில் இருந்து அதிகாரிகள் சூட்கேஸ் எடுத்துச் சென்றுள்ளனர். இன்று காலை முதல் அமைச்சர் நேரு, அவரது மகன் மற்றும் சகோதரர் வீடுகளில் ED அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
ஸ்மார்ட் ரேஷன் கார்டு: அப்ளை செய்ய, அப்டேட் செய்ய…

*ஸ்மார்ட் கார்டுக்கு விண்ணப்பிக்க அல்லது ஏற்கெனவே உள்ள கார்டில் மாற்றம் செய்ய https://tnpds.gov.in/ தளத்துக்கு செல்லவும்.
*ஸ்மார்ட் கார்டு விண்ணப்பத்தை தேர்ந்தெடுக்கவும்.
*அதில், குடும்ப உறுப்பினர்கள் விவரம், முகவரி, ஆதார் எண், மொபைல் எண் ஆகியவற்றை பதிவிடவும்.
*தேவையான ஆவணங்களை, குடும்பத்தினர் போட்டோக்களை பதிவிட்டு விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும். ஸ்மார்ட் கார்டு கிடைத்துவிடும். SHARE IT.
News September 15, 2025
அதிமுக மீண்டும் ஒன்றிணைவது உறுதி: சசிகலா

அதிமுகவை மீண்டும் ஒன்றிணைப்பது சிரமம், ஆனாலும் அதை செய்து முடிப்பேன் என சசிகலா திட்டவட்டமாக கூறியுள்ளார். MGR மறைவுக்கு பிறகு ஏற்பட்ட பிளவை மீண்டும் இணைத்த அனுபவம் தனக்கு உள்ளது என்றார். மேலும், அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் அனைவரும், ‘நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்’ என்ற அண்ணாவின் வழியில் நடக்க வேண்டும் என்றே விரும்புவதாகவும் கூறினார். உங்கள் கருத்து என்ன?
News September 15, 2025
School Fees-க்கு ₹1 லட்சம் வரை கொடுக்கும் முக்கிய திட்டம்!

பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்கள், 9-12ம் வகுப்பு வரை படிக்க ஆண்டுதோறும் ₹1,25,000 வரை கொடுக்கிறது PM YASASVI Scholarship திட்டம். இதற்கு, மாணவர்கள் OBC, EBC, DNT பிரிவுகளை சேர்ந்தவராக இருக்க வேண்டும். குடும்பத்தின் ஆண்டு வருவாய் ₹2.5 லட்சத்திற்கு குறைவாக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெற https://scholarships.gov.in/ – ல் அப்ளை பண்ணுங்கள். இதை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.