News October 31, 2025
அதிக தங்க நகை அணிந்தால் ₹50,000 அபராதம்!

அதிக தங்க நகை அணிவதை நம்மூரில் கௌரவமாக பார்ப்பார்கள். அதிக மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். ஆனால், நகை இல்லாத ஏழைகள் என்ன செய்வார்கள் என்று யோசித்துள்ளது ஹரியானாவில் உள்ள காந்தார் கிராமம். அதனால், அதிக தங்க நகை அணிந்தால் அங்கு ₹50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. சுப தினத்தில் கூட கம்மல், மூக்குத்தி, தாலி மட்டுமே அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. இதற்கு பெண்கள் ஒத்துக்கொண்டது தான் ஆச்சரியம்.
Similar News
News October 31, 2025
அக்டோபர் 31: வரலாற்றில் இன்று

Halloween
*1875 – சர்தார் வல்லபாய் படேல் பிறந்தநாள்.
*1922 – பெனிட்டோ முசோலினி இத்தாலியின் பிரதமரானார்.
*1931 – தமிழின் முதல் பேசும் படமான ‘காளிதாஸ்’ வெளியானது.
*1984 – இந்திரா காந்தி நினைவுநாள்.
News October 31, 2025
இளம்பரிதிக்கு ஸ்டாலின் வாழ்த்து

தமிழகத்தின் 35-வது கிராண்ட் மாஸ்டராக உருவெடுத்துள்ள இளம்பரிதிக்கு CM ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது திறமையால் தமிழக சாம்பியன்களின் கிரீடத்தில் மற்றொரு ரத்தினத்தை சேர்த்துள்ளதாகவும் அவர் பாராட்டியுள்ளார். தமிழகத்தின் செஸ்ஸில் சூரியன் உதிக்கும் போது, திராவிட மாடல் ஆட்சியில் இன்னும் பல முத்துகள் உருவாக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News October 31, 2025
வில்லியம் ஷேக்ஸ்பியர் பொன்மொழிகள்

*கண்கள், உங்கள் ஆன்மாவுக்கு ஜன்னல்.
*அனைவரையும் நேசியுங்கள், ஒரு சிலரை நம்புங்கள், யாருக்கும் தீங்கு செய்யாதீர்கள்.
*எதுவுமே செய்யாமல் எதுவும் வருவதில்லை.
*புத்திசாலித்தனமாகவும் மெதுவாகவும் செல்லுங்கள். வேகமாகச் செல்பவர்கள் தடுமாறி விழுந்துவிடுவார்கள்.
*உங்கள் அன்பை அதை மதிக்காதவருக்காக வீணாக்காதீர்கள்.
*பலரிடம் கேளுங்கள், சிலரிடம் பேசுங்கள்.


