News February 12, 2025
குட்டை உடை அணிவது குற்றமல்ல: நீதிமன்றம்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739300220444_785-normal-WIFI.webp)
பாரில் ஆபாச நடனம் ஆடியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 7 பெண்களை டெல்லி நீதிமன்றம் விடுவித்தது. பொது இடங்களில் குட்டையான உடைகளை அணிவது குற்றமல்ல எனவும், அவர்களின் நடனம் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினாலே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெளிவுபடுத்தியது. குட்டை உடையணிந்து ஆபாச நடனம் ஆடியதாக போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில், இதனால் சங்கடத்திற்கு ஆளான சாட்சிகளை ஆஜர்படுத்த தவறியதாக நீதிமன்றம் கூறியது.
Similar News
News February 12, 2025
எம்.பி.யாகும் கமல்ஹாசன்.. வெளியேறும் ஒருவர் யார்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739321915561_1241-normal-WIFI.webp)
தமிழகத்தில் வரும் ஜூலையுடன் 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. கூட்டணி ஒப்பந்தப்படி கமல்ஹாசன் எம்.பி.யாக உள்ளார். திமுகவின் வில்சன், சண்முகம், எம்.எம்.அப்துல்லா, திமுக கூட்டணியில் உள்ள வைகோ, அதிமுக ஆதரவுடன் தேர்வான அன்புமணி, அதிமுகவின் சந்திரசேகர் ஆகியோர்களின் பதவிக்காலம் நிறைவடைகிறது. இதில், கமல்ஹாசன் எம்.பி. ஆவதால் தற்போதுள்ள திமுக எம்.பி.க்களில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்காது.
News February 12, 2025
எதிர்பார்ப்பை எகிற வைக்கும் ரோகித், கோலி
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739325108962_55-normal-WIFI.webp)
IND – ENG இடையிலான 3rd ODI, இன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில், ரோகித் 13 ரன்கள் எடுத்தால் ODIயில் 11,000 ரன்களையும், கோலி 89 ரன்கள் எடுத்தால் 14,000 ரன்களையும் கடப்பார்கள். கடந்த சில போட்டிகளில் ரோகித், கோலி பேட்டிங் மோசமாக இருப்பதாக விமர்சனம் எழுந்தது. அதற்கு கடைசி போட்டியில் ரோகித் பதிலடி கொடுத்த நிலையில், இன்றைய போட்டியில் கோலி பதிலடி கொடுப்பாரா என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 12, 2025
அதிமுக உட்கட்சி விவகாரம் வழக்கில் இன்று தீர்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739323633937_55-normal-WIFI.webp)
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பான தேர்தல் ஆணைய விசாரணை தடையை நீக்கக் கோரிய வழக்கில் அனைத்து வாதங்களும் நிறைவடைந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. இபிஎஸ் – செங்கோட்டையன் விவகாரம் மிகப்பெரிய விவாதப்பொருளாக மாறியிருக்கிறது. இந்த சூழலில் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படும் இத்தீர்ப்பை, அதிமுக தலைமை முதல் தொண்டர்கள் வரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.