News February 28, 2025

Headphone போட்டால் ஆபத்து: அரசு

image

Earphones, Headphones, Earbuds ஆகியவற்றை நாளொன்றுக்கு 2 மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. இப்படி பயன்படுத்துவது, செவியின் கேட்கும் திறனை குறைத்து, நிரந்தர காது கேளாமையை உண்டாக்கக்கூடும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகநேரம் ஹெட்ஃபோன் பயன்படுத்தும் உங்கள் நண்பர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க.

Similar News

News February 28, 2025

தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள்: திருமா

image

தமிழ் மொழியை தாய்மொழியாக கொண்டவர்கள் இந்தியை கற்க வேண்டுமென ஆளுநர் கூறுவது RSS, BJPயின் ஆதிக்க மனப்பான்மையை உறுதிப்படுத்துவதாக திருமாவளவன் விமர்சித்துள்ளார். ஒரே தேசம், ஒரே மொழியை செயல்படுத்துவதற்காக ஆளுநர் இப்படி பேசி வருவதாகவும், அவரின் பேச்சுக்கு தமிழக மக்கள் ஒருபோதும் இணங்க மாட்டார்கள் என்றும் கூறினார். மேலும், தமிழகத்தில் மட்டுமல்ல எந்த மாநிலத்திலும் இந்தியை திணிக்கக் கூடாது என்றார்.

News February 28, 2025

ரூ.1,000 உதவித் தொகைக்கான தேர்வு: புது அறிவிப்பு

image

8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்வாகும் மாணவர்களின் வங்கிக் கணக்கில் 9 – 12ஆம் வகுப்பு வரை மாதம் ரூ.1,000 உதவித் தொகை செலுத்தப்படும். இந்தத் தேர்வு பிப்.9இல் நடத்தப்பட்டது. இதற்கான விடைக்குறிப்பு www.dge.tn.gov.inஇல் வெளியிடப்பட்ட நிலையில், ஆட்சேபனை இருந்தால், dgedsection@gmail.comஇல் மார்ச் 5க்குள் தெரிவிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் கூறியுள்ளது.

News February 28, 2025

இட்லிக்குள் ஊடுருவும் நச்சு ரசாயனங்கள்

image

சாலையோர உணவகங்கள் மற்றும் சில கடைகளில் இட்லி வேகவைக்கும் தட்டில் துணிக்கு பதிலாக பிளாஸ்டிக் தாள் பயன்படுத்தப்படுகிறது. நீராவியில் வேகும்போது, பிளாஸ்டிக்கில் உள்ள bisphenol A (BPA), phthalates, ஹார்மோனை சீர்குலைக்கும் ரசாயனங்கள், டயாக்சின், மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் போன்ற நச்சுப் பொருட்கள் இட்லியில் கலந்துவிடுகின்றன. இந்த இட்லிகளை சாப்பிடுவோருக்கு புற்றுநோய் அபாயம் அதிகம் என்கின்றனர் மருத்துவர்கள்.

error: Content is protected !!