News January 24, 2025

என் விருதைக் காணோம்: கஞ்சா கருப்பு புகார்

image

நடிகர் கஞ்சா கருப்பு தனது கலைமாமணி விருதைக் காணவில்லை என போலீசில் புகார் அளித்துள்ளார். சென்னை வளசரவாக்கத்தில் வாடகை வீட்டில் குடியிருக்கும் தன்னை ஹவுஸ் ஓனர் திடீரென காலி செய்யும்படி கூறியதாகவும், அவகாசம் தரும்படி கேட்டதற்கு சம்மதித்ததாகவும் அவர் கூறினார். எனினும், தான் மதுரை சென்றிருந்தபோது பூட்டிய வீட்டை உடைத்து, வொயிட் வாஷ் செய்ததாகவும், அதில் தனது வி்ருது தொலைந்துவிட்டதாகவும் நொந்து கொண்டார்.

Similar News

News December 10, 2025

BREAKING: இன்று தவெகவில் இணைகிறாரா EX அமைச்சர்?

image

முன்னாள் அமைச்சர்கள் பலர் தவெகவில் இணையவுள்ளதாக செங்கோட்டையன் கூறியிருந்தார். இந்நிலையில், OPS அணியில் இருக்கும் வைத்திலிங்கம் இன்று தவெகவில் இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு மேல் பனையூர் அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் வைத்திலிங்கம் இணையவிருக்கிறாராம். முன்னதாக இந்த தகவல் வெளியானபோது, தவெகவில் <<18485494>>இணையவில்லை <<>>என அவர் மறுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

News December 10, 2025

வீடுகளின் விலை கணிசமாக உயரும்

image

இந்தியாவில் வீடுகளின் விலை அடுத்த 2 ஆண்டுகளில் சராசரியாக 6% உயரும் என ரியல் எஸ்டேட் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல், ஆடம்பர வீடுகளின் விற்பனை வளர்ச்சி, அடுத்த 5 ஆண்டுகளுக்குள் குறைந்துவிடும். நாட்டின் முக்கிய 7 நகரங்களில் வீடுகள் விற்பனை கடந்த ஜூலை – செப்டம்பரில் 9% குறைந்துள்ளது. மேலும், RBI, இதற்கு மேல் வட்டி குறைப்பு செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

News December 10, 2025

ஒரு கோடி பிஹாரிகள் TN-ல் வாக்களிப்பதா? தயாநிதி

image

SIR-ன் போது ECI கேட்கும் ஆவணங்களில், 13-வது ஆவணமாக, பிஹார் வாக்காளர் திருத்த பட்டியல் உள்ளதாக தயாநிதி மாறன் MP தெரிவித்துள்ளார். பிஹார் வாக்காளர் பட்டியலில் உள்ளவர்கள், எந்த மாநில தேர்தலிலும் வாக்களிக்கலாம் என உள்ளதாகவும், இதன் மூலம் அம்மாநிலத்தை சேர்ந்த ஒரு கோடி பேர் TN-ல் வாக்களிக்கலாம் என அச்சம் நிலவுவதாகவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம், ECI-ன் உள்நோக்கம் புரிவதாகவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!