News October 21, 2025

அரசுடன் இணைந்து பணியாற்றுவோம்: நயினார்

image

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மக்கள், மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க நயினார் நாகேந்திரன் அறிவுறுத்தியுள்ளார். இந்த முக்கியமான தருணத்தில், வெறும் காணொலி கூட்டங்களோடு நிறுத்திவிடாது, போர்க்கால அடிப்படையில் போதிய முன்னேற்பாடுகளை செய்யவும் அவர் அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், மீட்பு பணிகளில் அரசுடன் இணைந்து பாஜக உறுதுணையாக களப்பணியாற்றும் என்றும் உறுதியளித்துள்ளார்.

Similar News

News October 22, 2025

நாளை இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

image

தமிழகம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், நாளை(அக்.22) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், தி.மலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. ஆகையால், கவனமுடன் இருங்கள்!

News October 22, 2025

4 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கனில் இந்திய தூதரகம்

image

ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள இந்திய அரசின் அலுவலகத்தை தூதரகமாக மேம்படுத்தி, வெளியுறவு அமைச்சகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும், இருதரப்பு உறவை மேம்படுத்தும் முயற்சி இதுவென்றும் தெரிவித்துள்ளது. 2021-ல் தாலிபன்கள் ஆப்கனில் ஆட்சியை கைப்பற்றியதும், இந்தியா தனது தூதரக அதிகாரிகளை திரும்ப பெற்றது. இருப்பினும், 2022-ல் சில அதிகாரிகளுடன் அலுவல் குழு அனுப்பி வைக்கப்பட்டது.

News October 22, 2025

ராசி பலன்கள் (22.10.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!