News April 24, 2025

இந்தியாவிற்கு துணை நிற்போம்: இஸ்ரேல் PM மீண்டும் உறுதி

image

PM மோடியை தொலைபேசி வாயிலாக அழைத்து பேசிய இஸ்ரேல் PM நெதன்யாகு பயங்கரவாத தாக்குதலை கடுமையாக கண்டித்தார். இந்தியாவிற்கு எப்போதும் துணை நிற்போம் என நெதன்யாகு மோடியிடம் தெரிவித்துள்ளார். எல்லை தாண்டி காட்டுமிராண்டி தனமாக நடந்த தாக்குதல் குறித்து பிரதமர் மோடி நெதன்யாகுவிடம் விரிவாக கூறியுள்ளார். மேலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் மோடி உறுதியாக தெரிவித்துள்ளார்.

Similar News

News December 6, 2025

டிசம்பர் 6: வரலாற்றில் இன்று

image

*1877–தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் முதலாவது இதழ் வெளியானது *1892–சுதந்திர போராட்ட வீராங்கனை ருக்மிணி லட்சுமிபதி பிறந்தநாள் *1935–நடிகை சாவித்திரி பிறந்தநாள் *1956–அம்பேத்கர் நினைவு நாள் *1971–வங்கதேசத்தை அங்கீகரித்த காரணத்தினால் இந்தியா உடனான தூதரக உறவுகளை பாகிஸ்தான் துண்டித்தது *1988–ரவீந்திர ஜடேஜா பிறந்தநாள் *1992–பாபர் மசூதி இடிக்கப்பட்டதால் நடந்த கலவரங்களில் 1,500 பேர் உயிரிழப்பு

News December 6, 2025

மக்களிடம் பிளவை உண்டாக்க முயற்சி: செல்வப்பெருந்தகை

image

திருப்பரங்குன்றத்தில் கலவரத்தை ஏற்படுத்தவும், மத நல்லிணக்கத்தை சீரழிக்கவும் ஒரு கும்பல் முயற்சிப்பதாக செல்வப்பெருந்தகை குற்றஞ்சாட்டியுள்ளார். அங்கு மகிழ்ச்சியாக வாழும் மக்களிடையே பிளவை ஏற்படுத்த பாஜக, RSS, இந்து முன்னணி சேர்ந்து வேலை செய்வதாக அவர் சாடியுள்ளார். மற்ற ஆறுபடை வீடுகளில் தீபம் ஏற்றாதவர்கள், எதற்காக திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற முயற்சிக்கிறார்கள் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

News December 6, 2025

‘LORD’ வார்த்தையை நீக்குக: பாஜக MP

image

பாடப்புத்தகங்களில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் பெயர்களில் உள்ள LORD வார்த்தையை நீக்க வேண்டும் என பாஜக எம்பி சுஜீத் குமார் வலியுறுத்தியுள்ளார். ராஜ்ய சபாவில் பேசிய அவர், பாடப்புத்தகங்கள், அரசு ஆவணங்கள், அரசு தளங்களில் இன்னுமும் LORD வார்த்தை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் அதை நாம் பின்பற்றுவது, ‘காலனித்துவ மனநிலையில்’ நீடிப்பதை உணர்த்துவதாக கூறியுள்ளார்.

error: Content is protected !!