News February 16, 2025
சட்டசபையில் செங்கோலை வைப்போம்: தமிழிசை

தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கையால் தமிழக சட்டசபையில் செங்கோலை வைத்த பின்னரே, சட்டசபைக்குள் நுழைவோம் என்றும், இது தனது சபதம் எனவும் அவர் சூளுரைத்தார். மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அவர், ‘இன்னொரு மொழியை கற்றால்தான் வளர்ச்சி; தமிழ் தமிழ் என பேசுபவர்களால் தமிழை பிழையின்றி பேச முடியுமா?’ என்றும் கேள்வியெழுப்பினார்.
Similar News
News November 23, 2025
படுத்த உடனே தூங்க வேண்டுமா?

இரவில் தூக்கம் வராமல் சிரமப்படுகிறீர்களா? படுத்த உடனே தூங்க வேண்டுமா? இதற்கு நாம் சாப்பிடும் உணவுகள் நமக்கு உதவி செய்கின்றன. அந்த உணவுகளில் மெலடோனின் போன்ற தூக்கத்தை மேம்படுத்தும் கூறுகள் உள்ளன. அவை என்னென்ன உணவுகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 23, 2025
BREAKING: சீமான் மீது கொலை மிரட்டல் வழக்குப்பதிவு

புதுச்சேரியில் செய்தியாளர் சந்திப்பில் <<18367239>>நிருபரை ஒருமையில் பேசிய விவகாரத்தில்<<>> சீமான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொலை மிரட்டல், தாக்குதல், தகாத வார்த்தையில் பேசுதல் ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சீமான் தகாத வார்த்தையில் பேசிய நிலையில், அந்த நிருபர் மீது நாதகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
News November 23, 2025
6 ஆண்டுகளுக்கு பின் சதம்… முத்துசாமியின் சாதனை

இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில், இன்று SA பேட்ஸ்மேன் முத்துசாமி, தனது முதல் சதத்தை(109) அடித்தார். இதன்மூலம், 6 ஆண்டுகளுக்கு பின், இந்தியாவில் 7 (அ) அதற்கு அடுத்த நிலையில் இறங்கி சதம் அடித்த முதல் SA வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கடைசியாக 2019-ல் டி காக் இந்தியாவில் சதம் அடித்தார். மேலும், இந்தியா, பாக்., வ.தேசம் நாடுகளில் 50+ ரன்கள் குவித்த 4-வது SA வீரராகவும் முத்துசாமி சாதித்துள்ளார்.


