News February 16, 2025
சட்டசபையில் செங்கோலை வைப்போம்: தமிழிசை

தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கையால் தமிழக சட்டசபையில் செங்கோலை வைத்த பின்னரே, சட்டசபைக்குள் நுழைவோம் என்றும், இது தனது சபதம் எனவும் அவர் சூளுரைத்தார். மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அவர், ‘இன்னொரு மொழியை கற்றால்தான் வளர்ச்சி; தமிழ் தமிழ் என பேசுபவர்களால் தமிழை பிழையின்றி பேச முடியுமா?’ என்றும் கேள்வியெழுப்பினார்.
Similar News
News March 24, 2026
சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது

தமிழகத்தில் 60 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் 5% சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட உள்ளது. சென்னை – கன்னியாகுமரி, திருச்சி – சேலம், சேலம் – கோவை உள்ளிட்ட தேசிய நெடுஞ்சாலைகள் உள்ள சுங்கச் சாவடிகளில் இந்த கட்டணம் உயர்வு அமலுக்கு வர உள்ளது. ஏற்கெனவே போர் சூழலால் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ள நிலையில், இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News March 24, 2026
வரலாற்றில் இன்று

➤1837 – கனடாவின் கறுப்பினக் குடிமக்களுக்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டது. ➤1882 – காச நோயை உருவாக்கும் நோய்க்கிருமியை கண்டுபிடித்ததாக ராபர்ட் கோக் அறிவித்தார். ➤1977 – நெருக்கடி நிலைக்குப் பிறகு இந்தியாவின் 4-வது பிரதமராக மொரார்ஜி தேசாய் பதவியேற்றார். ➤1922 – பின்னணிப் பாடகர் டி. எம். சௌந்தரராஜன் பிறந்த தினம். ➤1988 – பின்னணிப் பாடகர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் மறைந்த நாள்.
News March 24, 2026
இந்தியா நோக்கி புறப்பட்ட அடுத்த 2 கப்பல்கள்

ஹார்முஸ் நீரிணையில் இருந்து அடுத்த 2 கப்பல்கள் இந்தியா நோக்கி புறப்பட்டுள்ளன. பைன் கேஸ் மற்றும் ஜக் வசந்த என்ற கப்பல்கள் 92,000 டன் LPG உடன் ஓரிரு நாள்களில் இந்தியா வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே 3 இந்திய கப்பல்கள் வெற்றிக்கரமாக வந்தடைந்தன. மேலும், ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளை 500-க்கும் மேற்பட்ட சரக்கு கப்பல்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது


