News February 16, 2025
சட்டசபையில் செங்கோலை வைப்போம்: தமிழிசை

தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கையால் தமிழக சட்டசபையில் செங்கோலை வைத்த பின்னரே, சட்டசபைக்குள் நுழைவோம் என்றும், இது தனது சபதம் எனவும் அவர் சூளுரைத்தார். மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அவர், ‘இன்னொரு மொழியை கற்றால்தான் வளர்ச்சி; தமிழ் தமிழ் என பேசுபவர்களால் தமிழை பிழையின்றி பேச முடியுமா?’ என்றும் கேள்வியெழுப்பினார்.
Similar News
News November 28, 2025
அன்புமணி செய்தது கட்சி திருட்டு: ஜிகே மணி

தந்தை – மகன் சண்டையால் பாமக இரண்டாக பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில், ராமதாஸ் தலைமையிலான கட்சியே உண்மையான பாமக என தெரிவித்த ஜிகே மணி, EC-ல் போலியான ஆவணங்களை கொடுத்து அன்புமணி கட்சித் திருட்டு நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், அன்புமணி பாமக தலைவர் இல்லை என ராமதாஸ் அளித்த மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News November 28, 2025
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை… வந்தது அறிவிப்பு!

நாளை தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்ததாக சற்றுமுன் செய்தி வெளியானது. அந்த தகவல் சரியல்ல என்று தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மழை நிலவரத்தை பொறுத்து அந்தந்த மாவட்ட கலெக்டர்களே விடுமுறையை அறிவிப்பார்கள் என்றும், மாநிலம் முழுவதற்குமான ஒரே அறிவிப்பு ஏதும் வெளியிடப்படவில்லை அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News November 28, 2025
ஒருவரியில் EPS-க்கு பதிலடி கொடுத்த செங்கோட்டையன்

கோபிசெட்டிபாளையத்தில் <<18410825>>பிரம்மாண்ட பரப்புரையை<<>> EPS மேற்கொள்ள உள்ளது குறித்து செங்கோட்டையனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் என்று ஒருவன் நினைத்தால் ஆண்டவன் தான் என்று காட்டிவிடுவான்’ என ஒருவரியில் பதிலடி கொடுத்தார். 3 முறை வாக்கு கேட்காமலேயே கோபி மக்கள் தன்னை வெற்றி பெற வைத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக கோவை ஏர்போர்ட் வந்தடைந்த KAS-க்கு தவெக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.


