News February 16, 2025

சட்டசபையில் செங்கோலை வைப்போம்: தமிழிசை

image

தமிழகத்தில் பாஜக நிச்சயம் ஆட்சி அமைக்கும் என தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கையால் தமிழக சட்டசபையில் செங்கோலை வைத்த பின்னரே, சட்டசபைக்குள் நுழைவோம் என்றும், இது தனது சபதம் எனவும் அவர் சூளுரைத்தார். மேலும், மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய அவர், ‘இன்னொரு மொழியை கற்றால்தான் வளர்ச்சி; தமிழ் தமிழ் என பேசுபவர்களால் தமிழை பிழையின்றி பேச முடியுமா?’ என்றும் கேள்வியெழுப்பினார்.

Similar News

News December 4, 2025

JUST IN: திண்டுக்கல்லில் 100க்கும் மேற்பட்டோர் கைது!

image

திண்டுக்கல் பேருந்து நிலையம், MGR-சிலை அருகே தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திண்டுக்கல் மாவட்டம் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் வாக்குறுதிகளை நிறைவேற்ற வில்லை என்று கூறி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினரை நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

News December 4, 2025

டெல்லி காற்று மாசு: பிரியங்கா ஆவேசம்!

image

டெல்லி காற்று மாசுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியே எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போது பேட்டியளித்த பிரியங்கா காந்தி, குழந்தைகள், முதியவர்கள் மூச்சு விடவே சிரமப்படுவதாக தெரிவித்தார். ஒருவரையொருவர் குறை சொல்ல இது வெறும் அரசியல் பிரச்னை அல்ல என்று கூறிய அவர், வெறும் அறிக்கைகளை மட்டும் விடாமல், சரியான நடவடிக்கை எடுத்தால் எதிர்க்கட்சிகளும் துணை நிற்போம் என்று குறிப்பிட்டார்.

News December 4, 2025

சாலைகளை காணவில்லை: ஆர்.பி.உதயகுமார்

image

பருவமழையால் மதுரையில் ரோட்டையும் காணவில்லை, மேயரையும் காணவில்லை என ஆர்.பி.உதயகுமார் பதிவிட்டுள்ளார். வரும் 7-ம் தேதி CM ஸ்டாலின் மதுரைக்கு செல்வதை மேற்கோள்காட்டிய அவர், மண்டல தலைவர்களையும், மதுரையின் சாலைகளையும் CM கண்டுபிடித்து தருவாரா என கேட்டுள்ளார். மேலும், விளம்பர வெளிச்சம் தேடுவதற்கு பதிலாக, மதுரைக்கு பயனுள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்கு CM நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!