News March 25, 2024

தேர்தலில் ஓட்டு போட மாட்டோம்.. அறிவிப்பு

image

பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராம மக்கள் பலவகையான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், அடிப்படை ஐனநாயக உரிமைகளை பறிக்கும் வகையில் சர்வாதிகாரமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், பரந்தூர் புதிய விமான நிலைய திட்டத்தை கைவிடக் கோரியும், வரும் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்காமல், தேர்தலை முழுமையாக புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

Similar News

News April 20, 2025

அதிமுக – பாஜக கூட்டணி.. நயினார் முடிவில் திடீர் மாற்றம்!

image

தொகுதி பங்கீடு தொடர்பாக நயினாரின் பேச்சு விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. கடந்த 12-ம் தேதி தாமரை 40 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் என்றார். இது அதிமுக நிர்வாகிகளை அதிருப்தியில் ஆழ்த்தியது. இந்நிலையில், நேற்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் தொகுதி பங்கீடு குறித்து யாரும் பேச வேண்டாம் எனவும் இரட்டை இலையோடு சேர்ந்து அதிகமாக சட்டப்பேரவைக்கு செல்வோம் என்றும் கூறியுள்ளார். ஏன் இந்த திடீர் மாற்றம்?

News April 20, 2025

எங்கே செல்லும் இந்த பாதை?..

image

ஓட்டுக்கு காசு வாங்குறது, டிராஃபிக் மீறுனா, ஹெல்மெட் போடலனா போலீஸ கவனிக்குறதுன்னு லஞ்சம் புரையோடி போயிருக்கு. இந்த தவறான பழக்கம் அடுத்த தலைமுறையையும் விட்டு வைக்கல. லஞ்சம் கொடுத்தா எந்த வேலையும் முடிஞ்சிடும்னு அழுத்தமா அவங்க மனசுல பதிஞ்சு போயிருக்கு. அதுக்கு உதாரணமா தான் கர்நாடகாவுல பரீட்சையில் பாஸ்ஸாக டீச்சருக்கே லஞ்சம் கொடுக்குற அளவுக்கு வளர்ந்திருக்கு. இது எங்க போயி முடியுமோ?

News April 20, 2025

அவர்கள் இணைந்தால் பாஜகவிற்கு என்ன? பட்னவிஸ்

image

<<16151222>>உத்தவ் தாக்கரேவும்<<>>, ராஜ் தாக்கரேவும் இணைவதில் மகிழ்ச்சி என மகாராஷ்டிரா CM பட்னவிஸ் தெரிவித்துள்ளார். ஆனால் அதில் ஏன் பாஜக தலையிட வேண்டும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஹிந்தி திணிப்பை எதிர்த்து சகோதரர்களான 2 தாக்கரேக்களும் இணைய உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் சிவசேனாவை உடைத்து பாஜகவுடன் கூட்டணி வைத்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு வருத்தம் எனக் கூறப்படுகிறது.

error: Content is protected !!