News May 15, 2024
இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்

இந்தியா பலவீனமான நாடு அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறிவிட்டது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என பலர் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சிகளை விமர்சித்தார். மேலும், பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News December 17, 2025
BREAKING: திமுக அதிரடி.. மாறுகிறாரா செந்தில் பாலாஜி?

2021 தேர்தலில் கரூரில் போட்டியிட்ட செந்தில் பாலாஜி, இம்முறை வேறு தொகுதியில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு மண்டல பொறுப்பாளராக உள்ள செந்தில் பாலாஜி, கோவையில் திமுகவின் கரங்களை வலுப்படுத்த கோவை தெற்கில் போட்டியிட திட்டமிட்டுள்ளாராம். 2021-ல் கோவையில் உள்ள 10 தொகுதிகளையும் அதிமுக கூட்டணி அள்ளியதால், அதை முறியடிப்பதற்காக திமுக இந்த அதிரடி முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
News December 17, 2025
IPL ஏலம்: விலை போகாத தமிழக வீரர்கள்

IPL மினி ஏலத்தில் தமிழக கிரிக்கெட் வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏலப்பட்டியலில் ராஜ்குமார், துஷார் ரஹேஜா, சோனு யாதவ், இசக்கி முத்து, அம்ப்ரிஷ் உள்ளிட்ட 11 வீரர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்களில் ஒருவரை கூட எந்த அணியும் வாங்குவதற்கு முனைப்பு காட்டவில்லை. அஸ்வின் குறிப்பிட்டிருந்த சன்னி சந்துவின் பெயர் கூட ஏலத்தில் வாசிக்கப்படவில்லை. TN வீரர்களின் ஃபார்ம், திறனில் பிரச்னையா? என்ன காரணம்
News December 17, 2025
பாதுகாப்பற்ற அரசுப்பள்ளி கட்டடங்கள்: சீமான்

<<18583116>>திருவள்ளூரில் <<>>சுவர் இடிந்து விழுந்து மாணவன் இறந்தது, வேதனையளிப்பதாக சீமான் கூறியுள்ளார். கடந்தகால துயர்களை படிப்பினையாக கொண்டு நடவடிக்கை எடுத்திருந்தால் பள்ளிகளின் தரம் மேம்பட்டிருக்கும், ஆனால் அதை செய்யாமல் DMK அரசு அலட்சியம் காட்டியதாக அவர் சாடியுள்ளார். கார் பந்தயம், கலைஞர் அரங்கம் என பல நூறு கோடிகளை வீண்விரயம் செய்யும் அரசிடம் பள்ளிகளை தரமானதாக மாற்ற நிதி இல்லையா என கேள்வி எழுப்பியுள்ளார்.


