News May 15, 2024

இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்

image

இந்தியா பலவீனமான நாடு அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறிவிட்டது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என பலர் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சிகளை விமர்சித்தார். மேலும், பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

Similar News

News December 13, 2025

மயிலாடுதுறை: காவல்துறை எச்சரிக்கை

image

மயிலாடுதுறை மாவட்ட பொது மக்கள் சைபர் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள இணையதளத்தில், உங்கள் தனிப்பட்ட தகவல்களை அறிமுகமில்லாத நபர்களுடன் பகிர வேண்டாம். மேலும் சமூக ஊடக கணக்குகளை பலப்படுத்த பிரைவசி செட்டிங் ஐ பயன்படுத்த வேண்டும், உங்கள் புகைப்படங்கள் மற்றும் பதிவுகளில் இடம் (LOCATION) பதிவு செய்யும் அம்சத்தை முடக்க வேண்டும் என மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

News December 13, 2025

12-வது போதும்.. மத்திய அரசில் 208 காலியிடங்கள்!

image

✱தேசிய பாதுகாப்பு அகாடமியில் (NDA) காலியாக உள்ள 208 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✱கல்வித்தகுதி: 12-வது தேர்ச்சி ✱வயது: 18- 21 ✱சம்பளம்: பதவிக்கேற்ப மாறுபட்டது ✱தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, அறிவுத்திறன் & ஆளுமைத் தேர்வுகள் நடைபெறும் ✱விண்ணப்பிக்க கடைசி நாள்: 30.12.2025 ✱விண்ணப்பிக்க <>இங்கே<<>> கிளிக் செய்யவும் ✱இப்பதிவை அனைவருக்கும் பகிரவும்

News December 13, 2025

சற்றுமுன் அதிரடியாக கைது செய்யப்பட்டார்

image

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கரை சென்னை ஆதம்பாக்கம் போலீசார் சற்றுமுன் அதிரடியாக கைது செய்துள்ளனர். பட தயாரிப்பாளரை மிரட்டியதாக பதியப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பு கூறுகிறது. ஆனால், இதை மறுத்த சவுக்கு சங்கர், சென்னை மாநகர ஆணையர் அருண், பினாமி மூலம் சொத்துகள் வாங்கி பல கோடி ரூபாய் முதலீடுகள் செய்துள்ள விவரங்களை நேற்று வெளியிட்டதாலேயே கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார்.

error: Content is protected !!