News May 15, 2024

இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்

image

இந்தியா பலவீனமான நாடு அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறிவிட்டது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என பலர் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சிகளை விமர்சித்தார். மேலும், பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.

Similar News

News December 20, 2025

கொத்தாக நீக்கம்… ஸ்டாலின் அதிரடி முடிவு

image

தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு <<18617983>>வாக்காளர் <<>>பட்டியலில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, தங்கள் கட்சிக்காரர்களிடம் இருக்கும் பட்டியலையும், தற்போது வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலையும் ஒப்பிட்டு ஆய்வு செய்ய திமுக திட்டமிட்டுள்ளது. இதற்காக மூத்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை செய்ய ஸ்டாலின் முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

News December 20, 2025

வாக்காளர் பட்டியலில் சேர்வதற்கு இவை அவசியம்

image

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்படாதவர்கள், Form 6 படிவத்தை பூர்த்தி செய்வதோடு அரசு அங்கீகரித்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை BLO-விடம் சமர்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் விவரம்: *பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றிய அடையாள அட்டை *1987-க்கு முன்பு வங்கிகள், LIC வழங்கிய அடையாள அட்டை *பாஸ்போர்ட் *பிறப்பு, சாதி, வசிப்பிட, கல்விச் சான்று *உள்ளாட்சி அதிகாரிகள் தயாரித்த குடும்ப பதிவேடு.

News December 20, 2025

சனிக்கிழமை விரதத்தால் கிடைக்கும் பலன்!

image

பெருமாளுக்கு உகந்த தினமாக கருதப்படும் சனிக்கிழமையில், விரதம் கடைபிடித்தால் நினைத்த காரியம் கைகூடும் என நம்பப்படுகிறது. பகலில் பழமும், நீர் மட்டும் அருந்தி, இரவில் எளிய உணவுடன் விரதத்தை முடிக்கலாம். மாலையில் பெருமாள் கோயிலுக்கு சென்று எள் கலந்த நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள். இப்படி செய்தால் சனி பகவான் கொடுக்கும் சங்கடத்திலிருந்து, பெருமாள் நம்மை காப்பார் என்பது ஐதீகம்.

error: Content is protected !!