News May 15, 2024
இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம்

இந்தியா பலவீனமான நாடு அல்ல, உலகின் சக்திவாய்ந்த நாடாக மாறிவிட்டது என ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உ.பி., தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிடும் என பலர் தவறான கருத்துக்களை பரப்ப முயற்சிக்கின்றனர் என எதிர்கட்சிகளை விமர்சித்தார். மேலும், பாஜக கண்டிப்பாக ஆட்சிக்கு வரும் என்றும், எப்போதும் இடஒதுக்கீட்டை நிறுத்த மாட்டோம் என்றும் உறுதியளித்தார்.
Similar News
News December 17, 2025
திருப்பதி போக பிளான் இருக்கா? இதோ டிக்கெட்!

திருப்பதியில் ஏழுமலையானை தரிசனம் செய்ய மார்ச் மாதத்துக்கான தரிசன டிக்கெட் நாளை தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும் ₹300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு டிச. 24-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. பக்தர்கள் அர்ஜித சேவைகள் மற்றும் தரிசன டிக்கெட்டுகளை பெறவும், மேலும் விவரங்களை அறியவும் இங்கே <
News December 17, 2025
காலையில் எழுந்தவுடன் இந்த தப்பை பண்ணாதீங்க

ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் 80% பேர் தினமும் காலையில், குறைந்தபட்சம் 15 நிமிடங்களாவது படுக்கையில் மொபைல் பார்ப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால் இந்த பழக்கம் நமக்கே தெரியாமல் நமது உடல் மற்றும் மனநலத்துக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அதாவது, நாளடைவில் கவனச்சிதறல் அதிகரிப்பு, மன அழுத்தம், தலைவலி, பார்வையில் பாதிப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இதனால் ஏற்படுமாம். SHARE IT
News December 17, 2025
டி20 தொடரை கைப்பற்றுமா இந்தியா?

தென்னாப்பிரிக்கா – இந்தியா இடையேயான 4-வது டி20 போட்டி லக்னோவில் இன்று நடைபெற உள்ளது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என இந்தியா முன்னிலையில் உள்ளதால், இதில் வெற்றி பெற்றதால் தொடரை கைப்பற்றிவிடலாம். கடந்த போட்டியிலும் பும்ரா இல்லாமலேயே இந்தியாவின் பவுலிங் மிரட்டலாக இருந்தது. அதேபோன்று சிறப்பான ஆட்டத்தை மீண்டும் வெளிப்படுத்தினால் இந்தியாவை வீழ்த்துவது SA-வுக்கு பெரும் சவாலாக இருக்கும்


