News April 13, 2025
வக்ஃப் சட்டத்தை அமல்படுத்த மாட்டோம்: மம்தா உறுதி

மே.வங்கத்தில் வன்முறை வெடித்திருக்கும் நிலையில், வக்ஃப் சட்டத்தை அரசு அமல்படுத்தாது என அம்மாநில CM மம்தா பானர்ஜி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இந்தச் சட்டத்தை மத்திய அரசு தான் கொண்டு வந்தது. எனவே, அவர்களிடம் தான் விளக்கம் கேட்க வேண்டும் என கூறியுள்ளார். மதத்தின் பெயரால் யாரும் வன்முறையில் ஈடுபட வேண்டாம், மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News April 14, 2025
தமிழகத்தை சேர்ந்த 4 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி?

பிஹார் தேர்தலுக்கு முன்பு மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்றும், அப்பாேது பிஹார் மாநிலத்தை சேர்ந்த சிலருக்கு மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், 2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை மனதில் வைத்து, அண்ணாமலை, அன்புமணி, சி.வி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோருக்கும் மத்திய அமைச்சரவையில் இடமளிக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
News April 14, 2025
4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என IMD தெரிவித்துள்ளது. மாநிலத்தின் பல பகுதிகளில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதேநேரத்தில் சில பகுதிகளில் மழையும் பெய்கிறது. இந்நிலையில், நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, மதுரை, தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் மாலை 4 மணி வரை மழை பெய்யக்கூடும் என IMD கூறியுள்ளது.
News April 14, 2025
ஸ்ரீ விவகாரம்.. Beep போட்டு திட்டிய ‘மாநகரம்’ தயாரிப்பாளர்

முறையாக சம்பளம் கொடுக்காததால் நடிகர் ஸ்ரீ, மன அழுத்தத்திற்கு உள்ளாகி உடல் மெலிந்து காணப்படுவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக ‘மாநகரம்’, ‘இறுகப்பற்று’ படத் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஸ்ரீயின் உடல்நலம் பற்றி அக்கறை கொண்டுள்ளதாகவும், அவரை தொடர்பு கொள்ள நீண்ட நாள்களாக முயற்சித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், விஷயம் தெரியாமல் தன்னை திட்டுபவர்களை கெட்டவார்த்தையிலும் திட்டியுள்ளார்.