News April 25, 2025
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News December 24, 2025
1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்

பணி நிரந்தரம் செய்யக்கோரி தமிழகம் முழுவதும் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் 1000 ஒப்பந்த செவிலியர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. விரைவில் மற்றவர்களுக்கும் அறிவிப்பு ஆணை வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார். மேலும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.
News December 24, 2025
வாழ்வாதாரத்தை காக்க போராடும் விவசாயிகள் : CM

MGNREGA திட்டம் மாற்றியமைக்கப்பட்டதை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக கூட்டணி கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் MGNREGA திட்டத்தை மீட்டெடுக்க 389 இடங்களில் ஏழை விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது TN-ல் இருந்து ஒலிக்கும், ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளுக்கான குரல் என்பதை பாஜக உணர வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News December 24, 2025
பொங்கல் பரிசாக ₹5,000.. அமைச்சர் HAPPY NEWS

பொங்கல் பரிசுத் தொகை குறித்த தமிழக அரசின் அறிவிப்புக்காக மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரேஷன் அட்டைதாரர்களுக்கு தலா ₹5,000 வழங்க வேண்டும் என EPS உள்ளிட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். EPS கோரிக்கையை சுட்டிக்காட்டி பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், இதுகுறித்து CM ஸ்டாலின் நல்ல முடிவை எடுப்பார் என மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்துள்ளார். அதனால், விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.


