News April 25, 2025
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News November 27, 2025
‘அஞ்சான் 2’ சம்பவம் இருக்கு.. லிங்குசாமி கொடுத்த அப்டேட்

சூர்யாவின் ‘அஞ்சான்’ நவ.28ம் தேதி ரீ-ரிலீசாகும் நிலையில், இயக்குநர் லிங்குசாமி ‘அஞ்சான் 2’ அப்டேட் கொடுத்துள்ளார். படத்தில் இருந்த தவறுகளை சரிசெய்தே Re-edited வெர்ஷனை ரிலீஸ் செய்வதாக அவர் கூறியுள்ளார். சூரியின் அனைத்து காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், ரீ-ரிலீசிற்கு வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் சூர்யாவிடம் பேசி ‘அஞ்சான் 2’ பற்றி முடிவெடுக்கப்படும் என்றும் அவர் பேசியுள்ளார்.
News November 27, 2025
சிக்மண்ட் ஃப்ராய்ட் பொன்மொழிகள்

*வார்த்தைகளுக்கு ஒரு மந்திர சக்தி உண்டு. அவைகளால் மிகுந்த மகிழ்ச்சியையோ (அ) ஆழ்ந்த விரக்தியையோ ஏற்படுத்த முடியும்.
*காதல் என்பது ஒரு தற்காலிக மனநோய் நிலை.
*ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.
*காதலிக்கும்போது ஒருவர் மிகவும் பைத்தியக்காரத்தனமாக இருக்கிறார்.
*கனவுகள் நேற்றைய மிச்சத்திலிருந்து கட்டமைக்கப்படுகின்றன.
News November 27, 2025
பாஜகவுக்கு நன்றி கூறிய திருமாவளவன்

மத்தியில் பாஜக ஆட்சிக்கு வராமல் இருந்திருந்தால், அரசியலமைப்பு குறித்த விவாதம் பேசுபொருளாகியிருக்காது என திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் பாஜகவின் ஆட்சி இல்லாமல் போயிருந்தால் அம்பேத்கரின் உழைப்பும் தெரிந்திருக்காது என்ற அவர், இதற்காகவே பாஜகவுக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்றார். அத்துடன், SIR என்பது பாஜக & ECI-ன் கூட்டுச்சதி என்றும் திருமாவளவன் விமர்சித்துள்ளார்.


