News April 25, 2025
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News December 4, 2025
ரைஸ் இப்படி சாப்பிட்டால் சுகர் வராது..

எப்போதும் சாதத்தை அதிகமாகவும், காய்கறிகளை குறைவாகவும் சாப்பிடுறீங்களா? இந்த தவறை செய்வதால் ரத்தத்தில் குளுக்கோஸ் லெவல் அதிகரிக்கும். எனவே சாப்பாட்டை குறைத்து, காய்கறியை அதிகமாக எடுங்கள். அத்துடன், முதலில் நார்ச்சத்து(காய்கறி), புரதம்(கறி, முட்டை, பனீர்) சாப்பிடுங்கள். கடைசியாக கார்போஹைட்ரேட்(ரைஸ்) சாப்பிடும்போது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காது. இது பெரும்பாலானோருக்கு தெரியாது. SHARE THIS.
News December 4, 2025
சற்றுமுன்: விடுமுறை இல்லை.. அறிவித்தார் கலெக்டர்

இரவில் இருந்து விட்டுவிட்டு மழைபெய்து வரும் நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்று விடுமுறை அளிக்கப்படவில்லை. பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் இயங்கும் என்று அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். அதேநேரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
News December 4, 2025
BREAKING: அதிகாலை பயங்கர நிலநடுக்கம்

வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அதிகாலை 3.05 மணிக்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1-ஆகவும், அதிகாலை 4.45 மணிக்கு வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4-ஆகவும் பதிவாகியுள்ளது. இதனால், ஏற்பட்ட உயிரிழப்பு, பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை.


