News April 25, 2025

ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

image

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Similar News

News December 25, 2025

செங்கோட்டையன் அதிர்ச்சி.. மீண்டும் அதிமுகவில் சேர்ந்தார்

image

கடந்த ஏப்ரல் மாதம் அதிமுகவிலிருந்து விலகிய வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார். SP வேலுமணியின் வலதுகரமாக செயல்பட்டு வந்த கோவையை சேர்ந்த சந்திரசேகர், அதிமுகவில் MGR இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் பதவி வகித்து வந்தார். சந்திரசேகரனை வளைக்க செங்கோட்டையன் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக வேலுமணி முன்னிலையில் கட்சியில் இணைந்துள்ளார்.

News December 25, 2025

‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா விலகியது ஏன்?

image

‘புறநானூறு’ படத்தில் இருந்து சூர்யா வெளியேறியதற்கு தெளிவான காரணம் தனக்கு தெரியவில்லை என சுதா கொங்கரா தெரிவித்துள்ளார். ஆனால், தொடர்ந்து ஷூட்டிங் நடத்த முடியாததே முக்கிய காரணமாக இருக்கும் என கருதுவதாக அவர் கூறியுள்ளார். சூர்யா பிஸியாக இருந்ததால் தொடர்ந்து கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. ஆனால், இடைவெளிவிட்டு ஷூட்டிங் நடத்தினால், பட்ஜெட் எகிறும் என்பதால் சூர்யா வெளியேறி இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

News December 25, 2025

தமிழகத்தை உலுக்கிய சம்பவம்.. அதிரடி கைது

image

கடலூர் திட்டக்குடி அருகே நிகழ்ந்த பஸ் விபத்தில் 9 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. முன்பக்க டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்த பஸ், டிவைடரில் மோதி எதிரே வந்த கார்கள் மீது மோதியதில் இந்த கோர சம்பவம் நிகழ்ந்தது. இதற்கு திமுக அரசின் அலட்சியமே காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வந்தன. இந்நிலையில், பஸ் டிரைவர் தாஹா அலியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

error: Content is protected !!