News April 25, 2025
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News December 21, 2025
செங்கோட்டையனுக்கு அதிர்ச்சி.. களமிறங்கும் KK செல்வம்

தவெகவில் இணைந்த செங்கோட்டையனுக்கு எதிராக அவரது அண்ணன் மகன் KK செல்வத்தை வைத்து EPS காய் நகர்த்தி வருகிறாராம். கோபி தொகுதியில் செங்கோட்டையனை தோற்கடிக்க வேண்டும் என அவருக்கு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கோபியில் அதிமுக சார்பில் போட்டியிட KK செல்வம் விருப்ப மனு அளித்துள்ளார். சொந்த அண்ணன் மகனே தனக்கு எதிராக நிற்பது செங்கோட்டையனுக்கு தலைவலியாக மாறியிருக்கிறதாம்.
News December 21, 2025
‘வா வாத்தியார்’ வரமாட்டாரா?

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த கார்த்தியின் ’வா வாத்தியார்’ படத்தின் ரிலீஸ் பொங்கல் விடுமுறைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. டிச.5-ம் தேதி வெளியாக இருந்த இப்படம், நீதிமன்ற வழக்கு காரணமாக 12-ம் தேதிக்கும், பின்னர் 24-ம் தேதிக்கும் படக்குழு மாற்றியது. இந்நிலையில், சமீபத்தில் வெளியான SC தீர்ப்பை தொடர்ந்து படத்தின் ரிலீஸை படக்குழு 2026-க்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
News December 21, 2025
3 நாள்கள் மழை பொளந்து கட்டும்.. வந்தது அலர்ட்

தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, டிச.25-ல் டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும், டிச.26, 27 ஆகிய தேதிகளில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், டிச.24 வரை வறண்ட வானிலையே நிலவும் எனவும் அதிகாலை, இரவு நேரங்களில் பனிமூட்டம் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


