News April 25, 2025
ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம்: அமைச்சர்

சிந்து நதியில் இருந்து ஒரு சொட்டு நீர் கூட பாகிஸ்தானுக்கு செல்ல அனுமதிக்க மாட்டோம் என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் பாட்டில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அமித்ஷா உடனான ஆலோசனையின் போது இது குறித்து முடிவெடுத்துவிட்டதாகவும், இது தொடர்பாக குறுகிய, நீண்டகால கொள்கைகள் வகுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். நீர் நிறுத்தம் போராக கருதப்படும் என பாக். கூறிய நிலையில், அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Similar News
News December 17, 2025
பனீர் சாப்பிட பிடிக்குமா.. கொஞ்சம் கவனியுங்க!

இந்தியாவில் 83% போலியான பனீரே விற்கப்படுகின்றன என்ற ஷாக்கிங் தகவலை FSSAI தெரிவித்துள்ளது. இது மைதா, ArrowRoot powder, Urea ஆகியவற்றை கலந்து தயாரிக்கப்படுகிறதாம். பனீரின் மீது Iodine Tincture-ஐ விடும் போது, அது கருப்பாக மாறினால், அது போலியானது. அதுவே ஒரிஜினலாக இருந்தால், அது பனீர் மீது படிமமாக தேங்கி நின்றுவிடும். குடல், கிட்னி போன்றவற்றுக்கு இந்த போலி பனீர் பிரச்னையை உண்டாக்குமாம்.
News December 17, 2025
2026-ல் எந்தெந்த தொகுதிகள்.. பாஜக முக்கிய முடிவு

சென்னை கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பாஜக உயர்மட்ட குழு கூட்டம் இன்று காலை 11 மணியளவில் கூடுகிறது. இக்கூட்டத்தில், பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ள தொகுதிகள், கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுவது, வார்டு வாரியாக மக்கள் சந்திப்பை நடத்துவது உள்ளிட்டவை குறித்து முடிவு எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், நயினார், அண்ணாமலை, தமிழிசை உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
News December 17, 2025
தங்கம் விலை மளமளவென மாறியது

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 1 அவுன்ஸ்(28g) தங்கம் $6.20 உயர்ந்து, $4,312.09-க்கு விற்பனையாகி வருகிறது. இது இந்திய சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாள்களாக இந்தியாவில் தங்கத்தின் விலை உச்சத்தில் இருந்து வரும் நிலையில், நேற்று (டிச.16) சவரன் ₹98,800-க்கு விற்பனையானது.


