News March 29, 2024

100 நாள் வேலை ஊதியத்தை ரூ.400ஆக உயர்த்துவோம்

image

100 நாள் வேலைத் திட்ட ஊதியம், மத்தியில் I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால் ரூ.400ஆக உயர்த்தப்படும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “தேசிய ஊரக வேலை திட்ட சம்பளத்தை மோடி ரூ.7 உயர்த்தியுள்ளார். இந்த பெரிய நிதியை வைத்து, என்ன செய்வீர்கள் என அவர் கேட்டாலும் கேட்கக்கூடும். I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்த முதல்நாளே அந்த சம்பளம் ரூ.400ஆக உயர்த்தப்படும்” எனக் கூறியுள்ளார்.

Similar News

News November 7, 2025

உங்கள் குழந்தை கெட்ட வார்த்தை பேசாம இருக்கணுமா?

image

➤குழந்தைகள் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்த ஆரம்பிக்கும் போதே பெற்றோர் அதை கண்டித்து, திருத்த வேண்டும் ➤அந்த வார்த்தைகளை பேசுவது அவர்களுடைய மதிப்பை குறைக்கும் என எடுத்துரையுங்கள் ➤அவர்கள் முன் நீங்கள் கெட்ட வார்த்தையை பேசாதீங்க ➤தவறுதலாக கெட்ட வார்த்தை பேசினால் மன்னிப்பு கேட்க சொல்லுங்கள். அவர்களை கண்டிக்கும்போது கோபப்பட வேண்டாம். SHARE.

News November 7, 2025

வைகோவின் மனதை புண்படுத்த விரும்பவில்லை: OPS

image

2011-ல் அதிமுக கூட்டணிக்கு மதிமுக வராது என ஜெயலலிதாவிடம் OPS பொய் சொன்னதாக <<18224098>>வைகோ குற்றம்சாட்டியிருந்தார்<<>>. இந்நிலையில், ஜெயலலிதா என்ன சொன்னாரோ அதை மட்டுமே தான் செய்ததாக OPS விளக்கம் அளித்துள்ளார். மேலும், வைகோவின் மனம் புண்படும் என்பதால் அதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை என்றவர், 14 ஆண்டுகளுக்குப் பிறகு வைகோ அது பற்றி பேச வேண்டிய அவசியம் என்ன எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 7, 2025

பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் 2 பேர் வெளியேற்றம்

image

பிக்பாஸ் 9-வது சீசனில் இதுவரை டபுள் எவிக்சன் நடக்கவில்லை. இந்த வாரம் 2 பேர் வெளியேற்றப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறைந்த வாக்குகளை பெற்ற ரம்யாவும் துஷாரும் எவிக்சன் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இருவருமே பிக்பாஸ் வீட்டில் பெரியளவில் ஆக்டிவாக இல்லை. அதனால், இவர்களை வெளியேற்றியது சுவாரஸ்யத்தை குறைக்காது என பிக்பாஸ் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

error: Content is protected !!