News March 23, 2025
யார் ஆட்சியில் இருந்தாலும் போராடுவோம்: கம்யூ.,

மக்களை பாதிக்கிற எந்த விஷயமாக இருந்தாலும், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி போராட்டத்தை முன்னெடுக்கத்தான் செய்யும். யார் ஆட்சி (கூட்டணி திமுக ஆட்சி) என பார்க்க மாட்டோம் என்று அக்கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். மேலும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் மா.கம்யூ., கட்சி கூடுதல் தொகுதிகளில் போட்டியிடும். அதை நோக்கியே எங்கள் செயல்பாடுகள் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 25, 2025
மதியம் வெளியே வராதீங்க

தமிழகத்தில் வெயில் வரும் நாள்களில் இன்னும் தீவிரமடையலாம். எனவே பொதுமக்கள் பிற்பகல் நேரத்தில் வெளியே வர வேண்டாம். வெயிலில் மயக்கம் அடைந்து, சுய நினைவை இழந்து இருப்பவர்களை, குப்புற அல்லது மல்லாக்காக படுக்க வைக்க வேண்டும். மருத்துவ ரீதியில் பார்க்கும்போது, இதுபோன்ற நிலையில் இருப்பவர்களை இடது பக்க வாட்டில் படுக்க வைக்கும் முறை தான் சிறந்தது என்று சுகாதாரத்துறை பரிந்துரைத்துள்ளது.
News March 25, 2025
போஸ்ட் ஆபிஸ் சேமிப்பு: பெண்களுக்கு சூப்பர் சலுகை!

மகிளா சம்மான் சேமிப்பு திட்டத்தில் 40% வரை பணத்தை திரும்ப எடுத்துக்கொள்ளும் வசதியை, தபால் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், பெண்கள் குறைந்தது ₹1,000ல் இருந்து ₹2 லட்சம் வரை FD ஆக முதலீடு செய்யலாம். ஆண்டுக்கு 7.5% நிலையான வட்டி; அதுவும் காலாண்டுக்கு ஒருமுறை கணக்கிட்டு வழங்கப்படும். FDல் உள்ள பணத்தை 40% வரை எடுத்துக்கொள்ளலாம், மார்ச் 31க்கு முன் முதலீடு செய்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை கிடைக்கும்.
News March 25, 2025
பயங்கர நிலநடுக்கம்

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தென்மேற்கு பகுதியில் கடலுக்கு அடியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7ஆக பதிவாகியுள்ளது. இதனால், பல்வேறு நகரங்கள் குலுங்கியதால், மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி, சாலையில் தஞ்சம் புகுந்தனர். இதன் பாதிப்பு குறித்து உடனடியாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அதேபோல், சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.