News April 27, 2024

பிளே ஆஃப் சுற்றுக்கு நிச்சயம் தகுதி பெறுவோம்

image

பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவோம் என பஞ்சாப் வீரர் ஷசாங்க் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 5 போட்டிகள் இன்னும் மீதம் இருப்பதால் நாங்கள் நம்பிக்கையை கைவிடவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். KKR-க்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக விளையாடி அவர், 68 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். பஞ்சாப் அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 6 தோல்வி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

Similar News

News August 11, 2025

இந்தியாவை பார்த்து பொறாமை: ராஜ்நாத் சிங்

image

இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்வது சிலருக்கு பொறாமையை ஏற்படுத்தி இருப்பதாக டிரம்ப்பை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் மறைமுகமாக விமர்சித்துள்ளார். நானே எல்லோருக்கும் முதலாளி என்று கொக்கரிப்பவர்கள், இந்தியா எப்படி வேகமாக வளரலாம் என நினைப்பதாகவும், அதனாலேயே இந்தியா மீது அதிக வரிவிதித்துள்ளதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், இந்தியாவின் வளர்ச்சியை யாராலும் தடுக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

News August 11, 2025

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

image

துருக்கியின் தலைநகர் இஸ்தான்புல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 6.1 ரிக்டர் என்ற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாகவும், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளனர். முன்னதாக, ரஷ்யாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு, பல நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News August 11, 2025

அம்பேத்கர் பொன்மொழிகள்

image

*மற்றவர்களின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்தால் தான் உனக்கு நல்லவன் என்ற பெயர் கிடைக்குமானால், அந்த நற்பெயர் உனக்கு வேண்டாம். *வெற்றியோ தோல்வியோ எது வரினும் கடமையை செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலை வேண்டாம். நமது திறமையும் நேர்மையும் வெளியாகும்போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். *அறிவைத் தேடி ஓடுங்கள்; நாளைய வரலாறு உங்கள் நிழலாகத் தேடி ஓடிவரும்.

error: Content is protected !!