News April 16, 2024
இயன்றவரை இலக்கை நெருங்க முயற்சித்தோம்

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பேட்டிங் செயல்திறனை RCB வீரர்கள் வெளிப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் டூப்ளசி தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், 280 ரன்களை எட்டுவது கடினமானது என்றாலும் இயன்றவரை இலக்கை நெருங்கி செல்ல முயற்சித்தோம். 30-40 ரன்களை கூடுதலாக கொடுத்துவிட்டோம். பேட்டிங்கிலும் வேகப்பந்து வீச்சிலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது எனக் கூறினார்.
Similar News
News April 29, 2025
உங்கக்கிட்ட இந்த 7 பழக்கங்கள் இருக்கா?

வாழ்வில் நினைத்ததை எட்டிப்பிடித்து வெற்றிபெற சில பழக்கங்களை நாம் வழக்கமாக்கி கொள்ள வேண்டும் ➣எதிர்மறை சிந்தனையை கைவிடுங்கள் ➣முதலில் யாருடனும் உங்களை ஒப்பிட்டு கொள்ளும் பழக்கம் வேண்டாம் ➣சோம்பேறித்தனத்தால் வேலையை தள்ளிப்போடாதீர்கள் ➣பொறாமைப்பட்டு, எதுவும் செய்துவிட முடியாது ➣நான் இதை முடிப்பேன் என நம்பிக்கை மட்டும் போதும். Over-confidence வேண்டாமே ➣பிறர் விமர்சனத்தால் சட்டென துவண்டுவிட வேண்டாம்!
News April 29, 2025
IPL: 4 சதங்களுமே மேஜிக்தான்!

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 4 சதங்கள் அடிக்கப்பட்டுள்ளன. அதை அடித்த 4 வீரர்களும் இந்தியர்கள்தான். அதிலும் அனைத்து பேட்ஸ்மேன்களும் லெஃப்ட் ஹேண்ட் என்பது தான் இதில் கூடுதல் சிறப்பு. பஞ்சாப்பிற்கு எதிரான ஆட்டத்தில் அபிஷேக் 141 ரன்களும், ராஜஸ்தானுக்கு எதிராக கிஷன் 106, சென்னைக்கு எதிராக பிரியான்ஷ் 103 மற்றும் குஜராத்திற்கு எதிரான நேற்றைய போட்டியில் சூர்யவன்ஷி 101 ரன்களையும் அடித்துள்ளனர்.
News April 29, 2025
UPI சரியா வேலை செய்யணும்.. அமைச்சர் கண்டிப்பு

கடந்த ஜனவரி, மார்ச் மாதங்களில் 282 நிமிடங்கள் UPI வேலை செய்யாத நிலையில், இனி இதுபோன்ற இடையூறு இருக்கக் கூடாது என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டிப்பு காட்டியுள்ளார். டெல்லியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை செயலாளர், RBI, NPCI அதிகாரிகள் பங்கேற்றனர். அதில் பேசிய அமைச்சர், அடுத்த 3 ஆண்டுகளில் நாளொன்றுக்கு 100 கோடி UPI பரிவர்த்தனைகள் நடக்க நடவடிக்கை எடுக்கவும் ஆணையிட்டுள்ளார்.