News April 16, 2024
இயன்றவரை இலக்கை நெருங்க முயற்சித்தோம்

SRH அணிக்கு எதிரான போட்டியில் சிறந்த பேட்டிங் செயல்திறனை RCB வீரர்கள் வெளிப்படுத்தியதாக அந்த அணியின் கேப்டன் டூப்ளசி தெரிவித்துள்ளார். தோல்வி குறித்து பேசிய அவர், 280 ரன்களை எட்டுவது கடினமானது என்றாலும் இயன்றவரை இலக்கை நெருங்கி செல்ல முயற்சித்தோம். 30-40 ரன்களை கூடுதலாக கொடுத்துவிட்டோம். பேட்டிங்கிலும் வேகப்பந்து வீச்சிலும் சில இடங்களில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டி உள்ளது எனக் கூறினார்.
Similar News
News November 30, 2025
ஆக்டிவ் இல்லாத சிம் கார்டில் யூஸ் பண்றவங்களுக்கு செக்!

மொபைலில் ஆக்டிவாக உள்ள சிம் கார்டு இல்லாவிட்டால், WhatsApp, Telegram, ShareChat உள்ளிட்ட SM தளங்களை பயன்படுத்த முடியாமல் இருக்குமாறு செய்ய வேண்டும் என அந்தந்த நிறுவனங்களுக்கு DoT அறிவுறுத்தியுள்ளது. 90 நாள்களுக்கு, குறிப்பிட்ட App உடன் சிம் கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சைபர் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியுமாம்.
News November 30, 2025
திமுக கூட்டணியில் இணைந்தது புதிய கட்சி

2026 தேர்தலுக்கான கூட்டணியை வலுப்படுத்த DMK, ADMK, TVK தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், திமுக கூட்டணியில் ‘புதிய திராவிட கழகம்’ கட்சி இணைந்துள்ளது. இன்று மொடக்குறிச்சியில் அக்கட்சி சார்பில் நடைபெறவிருக்கும் ‘வெல்லட்டும் சமூக நீதி’ மாநாட்டில் உதயநிதி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். மேலும், அக்கட்சியின் தலைவர் கே.எஸ்.ராஜ் கவுண்டருக்கு கொங்கு மண்டலத்தில் ஒரு சீட் உறுதி என சொல்லப்படுகிறது.
News November 30, 2025
தமிழகத்தில் 16,929 பேர் உயர்கல்வியில் சேரவில்லை

2024 – 2025 கல்வியாண்டில் 3.51 லட்சம் அரசு பள்ளி மாணவர்கள் +2 பொதுத்தேர்வு எழுதிய நிலையில், 3.23 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். ஆனால், இவர்களில் 16,929 மாணவர்கள் உயர்கல்வியில் சேரவில்லையாம். இதனால், அந்தந்த பள்ளி மேலாண்மை குழு உதவியுடன், உயர்கல்வியில் சேராத மாணவர்களை கண்டறிந்து காரணங்களை அறிய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, அவர்களுக்கு உயர்கல்வியில் சேர்வதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.


