News May 8, 2024
பக்க விளைவுகள் இருக்குமென அப்போவே சொல்லிட்டோம்!

கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகள் ஏற்படுமென்று ஏற்கெனவே கூறியுள்ளதாக சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதிர்ச்சிகர தகவலை தெரிவித்துள்ளது. இந்தத் தடுப்பூசியின் வெளிப்படைத்தன்மையை நிறுவிட, த்ரோம்போசிஸ் & த்ரோம்போசைட்டோபீனியா சிண்ட்ரோம் உள்ளிட்ட பல அரிய பக்க விளைவுகள் ஏற்படக்கூடும் என்று மருந்துடன் வைக்கப்பட்டிருந்த அச்சிடப்பட்ட எச்சரிக்கை குறிப்பில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
Similar News
News September 24, 2025
மன்னிப்பு கேளுங்க! சீமான், விஜயலட்சுமிக்கு SC எச்சரிக்கை

தனக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி தொடர்ந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சீமான் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இன்று இம்மனு விசாரணைக்கு வந்தபோது, இவ்விவகாரத்தை எத்தனை நாள் இழுத்துக்கொண்டு செல்வது. இருவரும் குழந்தைகள் அல்ல; ஒருவருக்கு ஒருவர் மன்னிப்பு கேட்டு பிரச்னையை முடிவுக்கு கொண்டு வாருங்கள். இல்லையென்றால் இருவரையும் நீதிமன்றத்திற்கு வரவழைக்க நேரிடும் என்று நீதிபதி எச்சரித்துள்ளார்.
News September 24, 2025
விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது: திருமாவளவன்

திமுக அரசுக்கு எதிரான கருத்துகளை விஜய் வெறுப்பு அரசியலாக முன்வைக்கிறார் என திருமாவளவன் விமர்சித்துள்ளார். விஜய்யின் வெறுப்பு அரசியல் எடுபடாது என்றும் பரப்புரைக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விஜய்க்கு புதிதாக தெரியலாம், ஆனால் அவை எல்லோருக்கும் இருப்பவை தான் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், ஈழப் பிரச்னை உச்சத்தில் இருந்த காலத்தில் விஜய் வாய் திறந்து பேசியதாக தெரியவில்லை என்று அவர் தெரிவித்தார்.
News September 24, 2025
‘அம்மா GOOD BYE.. நான் சாகப்போறேன்’

மகாராஷ்டிரா, சந்திராபூரில் அனுராக் அனில் போர்கார்(19) என்ற மாணவரின் தற்கொலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உ.பி., கோரக்பூரில் ஒரு மெடிக்கல் காலேஜில் அவர் சேர இருந்த நாளில், ‘அம்மா எனக்கு டாக்டராக விருப்பமில்லை நான் சாகிறேன்’ என கடிதம் எழுதி அனுராக் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த ஆண்டு நீட் தேர்வில் அனுராக், தேசிய அளவில் 1,475-வது ரேங்க் (99.99 Percentile) பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.