News April 26, 2025
இந்தியாவுடன் நிற்கிறோம்: இலங்கை அதிபர்

இந்த கடினமான காலத்தில் இந்தியாவுடன் துணை நிற்பதாக இலங்கை அதிபர் அநுரகுமார திசநாயகே தெரிவித்துள்ளார் பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் 26 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான இலங்கையின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் பிரதமர் நரேந்திர மோடியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News December 2, 2025
5 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் விடுமுறை

தொடர் மழை காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளை(டிச.3) பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூரில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. மேலும், பல மாவட்டங்களில் மழை தொடர்வதால், அங்கும் விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இதனிடையே, தி.மலை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டிருப்பதால், பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் செயல்படாது.
News December 2, 2025
CINEMA 360°: ‘வா வாத்தியார்’ ரிலீஸ் தேதி மாற்றம்

*மோகன் லாலின் ‘திரிஷ்யம் – 3’ படப்பிடிப்பு நிறைவடைந்தது. *கார்த்தியின் வா வாத்தியார் படம் வருகிற 5-ம் தேதி வெளியாக இருந்த நிலையில், அது டிச.12 தேதிக்கு தள்ளிப்போயுள்ளது. *விமல் நடித்துள்ள ‘மகாசேனா’ படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. *‘அங்கம்மாள்’ படத்தில் இருந்து ‘செண்டிப்பூவா’ பாடல் வெளியாகி உள்ளது.
News December 2, 2025
தொகுதிப் பங்கீட்டில் இறங்கிய புதுச்சேரி ஆளும் கூட்டணி

புதுச்சேரியில் பாஜக, NR காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2026 தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையில் இருகட்சிகளும் ஈடுபட்டுள்ளன. CM ரங்கசாமியின் இல்லத்தில் பாஜகவின் புதுச்சேரி மேலிடப் பொறுப்பாளர் நிர்மல் குமார் தலைமையில் இந்த ஆலோசனை நடைபெற்றது. கடந்த தேர்தலில் NR காங்கிரஸ் 16 தொகுதிகளிலும், மீதமுள்ள 14 தொகுதிகளில் BJP, ADMK ஆகிய கட்சிகள் போட்டியிட்டது.


