News January 23, 2025

சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்க்கிறோம்: ஜெய்சங்கர்

image

சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். USAவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியிருந்தால், அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுவது நல்லதல்ல என்றார். முன்னதாக இந்தியர்கள் 18,000 பேர் USAவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 21, 2025

வாடகை வீட்டில் வசிப்பவரா நீங்கள்? இது உங்களுக்குதான்..

image

வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு புதிய விதிகள் அமலாகி உள்ளன. இந்த புதிய வாடகை விதிகள் 2025, வாடகைதாரர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்களுக்கு இடையே வாடகையை வெளிப்படையானதாகவும், நியாயமானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அவை என்னென்ன விதிகள் என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 21, 2025

நாட்டின் பகுதிகளை இழக்க தயாராகிறதா உக்ரைன்?

image

ரஷ்யா உடனான போரை நிறுத்த, USA உடன் இணைந்து செயல்படுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். அடுத்த சில நாள்களில் இது தொடர்பாக டிரம்ப்புடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அதேபோல், தாங்கள் முன்வைத்த பெரும்பாலான நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக்கொண்டதாக USA உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். USA நிபந்தனைகளின்படி, ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள பல பகுதிகளை உக்ரைன் இழக்க நேரிடும்.

News November 21, 2025

பிஹார் தேர்தலில் முறைகேடு: நிதியமைச்சர் கணவர் புகார்

image

பொருளாதார நிபுணரும், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர், பிஹார் தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டியுள்ளார். பதிவான வாக்குகளை விட எப்படி 1.77 லட்சம் வாக்குகள் அதிகமாக எண்ணப்பட்டன என்பது குறித்து நாட்டு மக்களுக்கு ECI விளக்க வேண்டும். மேலும், SIR-க்கு பிறகான இறுதி வாக்காளர் பட்டியலை விட, மொத்த வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்து இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!