News November 19, 2024

மிகப்பெரிய தவறு செய்து விட்டோம்: ராகுல் வருத்தம்

image

2011ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோதே, சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தாமல் UPA அரசு மிகப்பெரிய தவறு செய்து விட்டதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ராஞ்சியில் பேட்டியளித்த அவர், சாதிவாரி கணக்கெடுப்பு என்பது காங்கிரஸ் கூட்டணியின் சிந்தனையில் உதித்த குழந்தை. அதை அமல்படுத்தாதது தவறு என்று வருத்தத்துடன் கூறியுள்ளார். ராகுலின் கருத்து குறித்த உங்கள் கமெண்டை கீழே பதிவிடுங்க.

Similar News

News March 13, 2026

சேலம்: EB கட்டணம் அதிகமா வருதா? இதை CHECK பண்ணுங்க!

image

சேலம் மக்களே உங்க வீட்டில் திடீரென மின் கட்டணம், நீங்க பயன்படுத்துவதை விட அதிகம் வருகிறதா. இதுபோன்ற மின் பிரச்னைகளுக்கு நீங்கள் EB ஆபிஸ் செல்ல வேண்டும் என்ற நிலை இல்லை. தமிழ்நாடு அரசின் <>TANGEDCO<<>> என்ற செயலியில் புகார் அளிக்கலாம். அல்லது 94987 94987 என்ற கட்டணமில்லா புகார் எண்ணை தொடர்பு கொண்டும் புகார் தெரிவிக்கலாம். இதில் மின் கட்டணத்தையும் செலுத்தலாம். இந்த நல்ல தகவலை SHARE செய்து உதவுங்க.

News March 13, 2026

இவருடைய கட்சியில் தான் சசிகலா சேர்ந்துள்ளார்!

image

இன்று சசிகலா <<19370263>>அஇபுதமமுக<<>> என்ற கட்சியில் தன்னை இணைத்து கொண்டார். இக்கட்சியை எம்ஜிஆரின் தீவிர ரசிகரான பி.சக்கரவர்த்தி என்பவர் தொடங்கி இருந்தார். மதுரையை சேர்ந்த இவர், 2012-ல் ‘சக்கரவர்த்தி திருமகன்’ என்ற படத்தை எழுதி, இயக்கி, தயாரித்து, ஹீரோவாக நடித்துள்ளார். 2016-ல் இந்த கட்சியைத் தொடங்கி தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்து வைத்துள்ளார்.

News March 13, 2026

வங்கிக் கணக்கில் மேலும் ₹6,000.. CM ஸ்டாலின் அறிவிப்பு

image

வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் (BLO) ஊதியத்தை மேலும் ₹6,000 உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, BLO-க்களின் ஆண்டு ஊதியம் ₹6,000-ல் இருந்து ₹12,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊக்கத் தொகையை ₹2,000 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. BLO ஊதியம் மற்றும் ஊக்கத் தொகை உயர்வுக்காக ₹99 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!