News March 20, 2025
போரை நிறுத்தவே 400 பேரைக் கொன்றோம்: இஸ்ரேல்

ராணுவ அழுத்தம் கொடுத்து ஹமாஸை அடிபணிய வைக்கவே, 400 பேர் கொல்லப்பட்ட சமீபத்திய தாக்குதல் நடத்தப்பட்டதாக இந்தியாவிற்கான இஸ்ரேல் தூதர் ரீவன் அசார் தெரிவித்துள்ளார். ஹமாஸுக்கு இரண்டே வாய்ப்புகள் மட்டும் தான் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். USA, இஸ்ரேல் தரும் ஆஃபர்களை ஏற்றுக் கொள்வது அல்லது பணயக் கைதிகளை விடுவித்துவிட்டு காசாவில் இருந்து வெளியேறுவதுதான் அந்த வாய்ப்புகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News March 20, 2025
ரூ.10,000க்கு தரமான லேப்டாப் சாத்தியமா? தங்கமணி கேள்வி

ரூ.10,000க்கு எப்படி தரமான மடிக்கணினி வழங்க முடியும் என முன்னாள் அமைச்சர் தங்கமணி பேரவையில் கேள்வி எழுப்பியுள்ளார். 20 லட்சம் லேப்டாப் வாங்க ரூ.2,000 கோடி தமிழக அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியது தொடர்பாக கேள்வி எழுப்பிய அவர், தரமான மடிக்கணினியை வெறும் ரூ.10,000 எப்படி வழங்க முடியும் என வினவினார். இதற்கான நிதியை தமிழக அரசு உயர்த்தும்படியும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
News March 20, 2025
குழந்தைகளுக்கு இதை கொடுக்காதீங்க பிளீஸ்…

பிறந்து ஒரு வயதான குழந்தைகளுக்கு திட உணவுகளை கொடுப்பதில் மிக கவனம் தேவை. பெரியவர்கள் போல் அவர்களுக்கு ஜீரண சக்தி இருக்காது என்பதால் நட்ஸ் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் பாக்கெட் பால், தேன், கடினமான காய்கறிகள், திராட்சை, கடல் சார்ந்த உணவுகள் உள்ளிட்டவற்றை தவிர்ப்பது நல்லது. மிட்டாய்களை கொடுக்கவே கூடாது. கடைகளில் வாங்கும் பிஸ்கட் போன்ற பொருட்களை தவிர்க்க வேண்டும்.
News March 20, 2025
IPL-ல் அந்த தடை நீங்கியது – பவுலர்களுக்கு குட் நியூஸ்!

பந்தில் எச்சிலை தேய்ப்பது மூலம் பவுலர்கள் எளிதாக ஸ்விங் செய்ய முடியும். கொரோனா காலத்தில், நோய்த்தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு இதற்கு ஐசிசி தடை விதித்தது. தற்போதுவரை சர்வதேச போட்டிகளில் இத்தடை தொடரும் நிலையில், IPL-ல் இதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பந்தில் எச்சில் தேய்ப்பதற்கு இருந்த தடையை ஐபிஎல் தொடருக்காக பிசிசிஐ நீக்கியுள்ளது. சர்வதேசப் போட்டிகளுக்கும் தடை நீங்குமா? உங்கள் கருத்து என்ன?