News April 18, 2025

அழவில்லை; உரிமையை கேட்கிறோம்: CM பதிலடி

image

நாங்கள் அழவில்லை; உரிமையை தான் கேட்கிறோம் என PM மோடிக்கு CM ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பாம்பன் திறப்பு விழாவில் பங்கேற்ற PM மோடி நிதி தரவில்லை என்பதற்காக சிலர் அழுகிறார்கள் என விமர்சித்திருந்தார். இதற்கு பதில் அளித்த ஸ்டாலின், மத்திய அரசிடம் கையேந்த மாநில அரசுகள் பிச்சைக்காரர்களா என குஜராத் CM ஆக இருந்தபோது PM கேட்டதை சுட்டிக்காட்டினார். நீங்கள் கேட்டால் சரி; நாங்கள் கேட்டால் தவறா? என்றார்.

Similar News

News December 27, 2025

ராமநாதபுரம்: இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை

image

ராமநாதபுரம் நம்புதாளை மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த (நவ, 3) அன்று மீன் பிடிக்கச் சென்றபோது, இலங்கை கடற்படையால் வேதாரண்யம் மீனவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று ஊர்க்காவல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 4 பேருக்கும் இலங்கை மதிப்பில் தலா ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது. இந்த பணத்தை இந்திய அதிகாரிகள் செலுத்தியதும் மீனவர்கள் படகுகளுடன் விடுதலை செய்யப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர்.

News December 27, 2025

3 குழந்தைகளை பெறுவது சிறந்தது: சந்திரபாபு நாயுடு

image

உலகளவில் ஆதிக்கம் செலுத்த இந்தியாவுக்கு ஒரு பெரிய தொழிலாளர் சக்தி வேண்டும் என ஆந்திர CM சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் முக்கியம் என்று கூறிய அவர், RSS தலைவர் மோகன் பகவத் கூறுவதுபோல ஒவ்வொரு தம்பதியும் 3 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்றார். மக்கள் தொகையில் கவனம் செலுத்தினால் 2047-க்கு பிறகும் இந்தியா ஆதிக்கம் செலுத்தும் என்றும் கூறினார்.

News December 27, 2025

சர்வதேச சந்தையில் தங்கம் இன்று ₹4,906 உயர்ந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை இன்று(டிச.27) ஒரே நாளில் இந்திய மதிப்பில் ₹4,906 உயர்ந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக இந்திய சந்தையில் ஜெட் வேகத்தில் உயர்ந்து வரும் தங்கம், தற்போதைய நிலவரப்படி சவரன் ₹1,03,120-க்கு விற்பனையாகிறது. இந்த நிலையில், சர்வதேச சந்தையில் 1 அவுன்ஸ்(28g) தங்கம் $54.63(₹4,906) உயர்ந்து $4,534-க்கு விற்பனையாகிறது. கடந்த 30 நாள்களில் மட்டும் $323(₹28,821) உயர்ந்துள்ளது.

error: Content is protected !!