News May 14, 2024
WC: பாண்டியாவை சேர்த்ததை ரோஹித் விரும்பவில்லை!

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் இருந்து அணித் தேர்வு தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், தேர்வுக்குழு தலைவர் அகார்கர் மற்றும் ரோஹித் இருவரும் பாண்டியாவை அணியில் சேர்க்க விரும்பவில்லை என்றும், மேலிட அழுத்தம் காரணமாகவே அவரை அணியில் சேர்த்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடரில் பாண்டியா சரியாக ஆடாததே இதற்கு காரணமாக் கூறப்படுகிறது.
Similar News
News August 23, 2025
வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்!

கார் ஓட்டும்போது கைப்பேசியில் பேச ஆரம்பித்தால் கார் ஓட்டுவது விபரீதத்தில் முடியும் அல்லவா. அது போலதான் நமது வாழ்வும். சின்ன சின்ன விஷயங்களின் காரணமாக கவனம் சிதறினால், செய்ய நினைக்கும் வேலையில் முழு கவனம் கிடைக்காது. இந்த கவனச்சிதறலில் இருந்து தப்பிக்க, சிம்பிள் டிரிகஸ் ஒன்னு இருக்கு! வேண்டியதற்கு கவனம் செலுத்தினாலே போதும்.. வேண்டாதது அதுவாக தானாகவே விலகிவிடும்.
News August 23, 2025
உதயநிதியை பார்த்து அமித்ஷாவுக்கு பயம்: ஆ.ராசா

ராகுல் பிரதமராகவும், உதயநிதி முதல்வராகவும் ஆக முடியாது என அமித்ஷா நேற்று தெரிவித்திருந்தார். இதுபற்றி அறிக்கை வெளியிட்ட ஆ.ராசா, ஜெய்ஷா எவ்வாறு BCCI செயலாளரானார் என கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் வாக்களித்தால் யார் வேண்டுமென்றாலும் CM ஆகலாம் என்றும், இதே விமர்சனங்கள் கடந்த காலங்களில் ஸ்டாலினுக்கும் வந்ததாகவும், தற்போது உதயநிதியைப் பார்த்து அமித்ஷாவுக்கு பயம் வந்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
News August 23, 2025
விரைவில் இந்தியாவில் OpenAI அலுவலகம்

AI கருவிகளின் புழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், OpenAI-யின் புதிய அலுவலகத்தை இந்த ஆண்டுக்குள் இந்தியாவில் திறக்கவுள்ளதாக, அதன் CEO சாம் ஆல்ட்மேன் அறிவித்துள்ளார். கடந்த ஆண்டில் மட்டும் ChatGPT பயனர்கள் 4 மடங்கு அதிகரித்துள்ளதாக தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், விரைவில் இந்தியாவுக்கு வர திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். நீங்க AI யூஸ் பண்றீங்களா?