News August 3, 2024
வயநாடு நிலச்சரிவு: உயிரிழப்பு 388ஆக உயர்வு

வயநாட்டில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 388 ஆக உயர்ந்துள்ளது. மீட்புக்குழுவினர் 5ஆவது நாளாக பாதிக்கப்பட்ட இடங்களில், தெர்மல் ஸ்கேனரை பயன்படுத்தி, யாரேனும் உயிருடன் இருக்கிறார்களா என தீவிரமாக தேடி வருகின்றனர். இதுவரை 9,328 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 500-ஐ தாண்டலாம் என கேரள அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Similar News
News November 17, 2025
தெலங்கானா சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்

தெலங்கானா சபாநாயகர் பிரசாத் குமாருக்கு SC கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 2023 தேர்தலில், காங்கிரஸ் வென்று ஆட்சியமைத்த போது, BRS கட்சியின் 10 MLA-க்கள் அக்கட்சிக்கு தாவினர். அவர்களை தகுதியிழப்பு செய்யக் கோரும் BRS-ன் மனு மீது, SC ஆணையிட்டும் சபாநாயகர் செயல்படவில்லை. இதையடுத்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்காவிட்டால், புத்தாண்டில் எங்கு இருப்பது என்பது உங்கள் கையில் என சபாநாயகரை SC எச்சரித்துள்ளது.
News November 17, 2025
பூதாகரமாகும் லாலுவின் குடும்ப பிரச்னை

தேஜஸ்வி யாதவ் செருப்பால் அடிக்கவந்ததாக லாலுவின் மகள் ரோஹினி கூறிய சர்ச்சையே இன்னும் ஓயவில்லை. அதற்குள், மேலும் 3 மகள்கள் ராஜலஷ்மி, ராகினி, சண்டா ஆகியோரும் குடும்பத்துடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர். குடும்பத்தில் நடக்கும் தகராறு காரணமாக அவர்கள் டெல்லிக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது குடும்ப பிரச்னை கட்சியை பாதிக்குமோ என தொண்டர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
News November 17, 2025
அலர்ட்: புயல் வரப்போகும் தேதி இதுதான்

நவ.22-ல் வங்கக்கடலில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகவுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. அதற்கடுத்த 48 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து, நவ.25-ல் புயலாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கடலோர & டெல்டா மாவட்டங்களில் நவ.21, 22 ஆகிய நாள்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் IMD கணித்துள்ளது.


