News February 13, 2025
வயநாடு சம்பவம்: வருத்தத்தில் பிரியங்கா
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739424217414_1328-normal-WIFI.webp)
கேரளாவின் வயநாட்டில் வனவிலங்குகள் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அந்த தொகுதியின் MP பிரியங்கா காந்தி, பொதுமக்கள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியுள்ளார். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் போதிய நிதி ஒதுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News February 13, 2025
கலை இயக்குநர் சுரேஷ் கல்லேரி காலமானார்!
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739446826681_1204-normal-WIFI.webp)
மணிகண்டன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தில் கலை இயக்குநராக பணிபுரிந்த சுரேஷ் கல்லேரி (56) மாரடைப்பால் இன்று காலமானார். தமிழில் தெனாவட்டு, குட்டிப்புலி, துள்ளி விளையாடு, என்ன சத்தம் இந்த நேரம், வணக்கம்டா மாப்ளே, ஜெயில், ராஜ வம்சம் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கலை இயக்குநராக சுரேஷ் கல்லேரி பணியாற்றியுள்ளார். இன்று மாலை அவரது உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.
News February 13, 2025
வெளியானது தவெக விதிகள்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_12025/1737478049843_55-normal-WIFI.webp)
தவெகவின் தலைவரை கட்சியின் அடிப்படை உறுப்பினர்களே தேர்வு செய்வார்கள் என விதி வகுக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை தவெகவில் சட்டவிதிகளுக்கு உட்பட்டு தலைவரை தேர்ந்தெடுக்க உட்கட்சித் தேர்தல். தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பினால் மாநில, மாவட்ட நிர்வாகிகளாக 4 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். தலைவர் பதவி விலகினால் பொதுக்குழு கூடி தேர்வு செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News February 13, 2025
வருமான வரி மசோதா: என்ன மாற்றங்கள்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739443945589_1328-normal-WIFI.webp)
லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவில் எந்த வரிகளும் சேர்க்கப்படவில்லை. 622 பக்கங்கள் கொண்ட இதில் 1961 ஆம் ஆண்டின் வருமான வரிச் சட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. ‘முந்தைய ஆண்டு’, ‘மதிப்பீட்டு ஆண்டு’ வார்த்தைகளும் புதிய மசோதாவில் நீக்கப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக ‘வரி ஆண்டு’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளது.