News October 25, 2024
Way2 செய்தி எதிரொலியால் ஊராட்சி நடவடிக்கை

சிவகாசி அருகே விஸ்வநத்தம் ஊராட்சிக்குட்பட்ட கவிதா நகர் செல்லும் சாலையில் பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டன. இதுகுறித்து Way2 வில் செய்தியாக வெளியிடப்பட்டது. செய்தியின் எதிரொலியாக ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை அகற்றியதுடன் அங்கு குப்பைகள் கொட்டுபவர்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
Similar News
News August 25, 2025
விருதுநகரில் அடுத்த 3 மணி நேரத்தில் இடியுடன் மழை

அடுத்த 48 மணி நேரத்தில் ஒரிசா–மேற்கு வங்காள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்,ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் இன்று(ஆக.25) இரவு 10 மணிக்குள் விருதுநகர் மாவட்டத்தில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
News August 25, 2025
விருதுநகர்: வீட்டு வரி பெயர் மாற்ற அலையுறீங்களா?

விருதுநகர் மக்களே நீங்க ஆசையாய் வாங்கிய வீட்டின் பத்திரம் பதிவு முடித்து, உட்கார நினைக்கும்போது அடுத்த அலைச்சலாக வீட்டு வரி பெயர் மாற்றம் தயாராக இருக்கும். அந்த அலைச்சலை போக்க எளிய வழி! <
News August 25, 2025
விருதுநகர் மக்களே, பிரச்சனையா? உடனே கால் பண்ணுங்க!

விருதுநகர் மாவட்ட மக்கள் தங்கள் குறைகளை எளிதில் தொலைபேசி வாயிலாக தெரிவிக்கும் வண்ணம் மாவட்ட ஆட்சியர் தொலைபேசி எண்ணை வெளியிட்டுள்ளார். 9791322979 என்ற எண்ணில் வாட்ஸாப் (அ) கால் செய்தோ தங்கள் அடிப்படை வசதிகள் தொடர்பான குறைகளை உடனுக்குடன் தெரிவித்து கொள்ளலாம். மாவட்ட அறை கட்டுப்பாட்டு உதவி எண் – 1077. இப்பயனுள்ள தகவலை எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க.