News September 30, 2025
விஜய் செய்தது சரியா? அதிகரிக்கும் விமர்சனங்கள்

கரூர் துயரம் நடந்து 3 நாள்களுக்கு பின் இன்று வீடியோ வெளியிட்ட விஜய், 41 பேர் மரணத்திற்கு வருத்தமும் இரங்கலும் தெரிவித்தார். ஆனால், மன்னிப்பு கேட்கவில்லை. இதை பல்வேறு தரப்பினரும் கண்டித்துள்ளனர். இவ்வளவு பெரிய துயரச் சம்பவம் நடந்துள்ளது. குறைந்தபட்சம் அதற்கு தார்மிகப் பொறுப்பு ஏற்கவோ, அந்த பாதிப்புக்கு மன்னிப்பு கேட்கவோ செய்யாதது, பொறுப்பை தட்டிக் கழிக்கும் செயல் என பலரும் விமர்சித்துள்ளனர்.
Similar News
News September 30, 2025
அனைத்து ரேஷன் கார்டுக்கு ₹5,000… வெளியான புது தகவல்

வரவிருக்கும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ₹5,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தீபாவளி பண்டிகையின்போது முதலமைச்சர் அறிவிப்பார் என தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த அறிவிப்பு வெளியாகும் பட்சத்தில், சுமார் 2.20 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.
News September 30, 2025
அதிகம் தேடப்பட்ட தீபிகா!

நடிகர்கள் மட்டும் சூப்பர் ஸ்டாராக கொண்டாடப்படும் சினிமா உலகில், நடிகை தீபிகா படுகோனே சாதனை படைத்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அதிகம் தேடப்பட்ட இந்திய சினிமா நட்சத்திரங்கள் பட்டியலில் தீபிகா படுகோனே முதலிடத்தில் இருப்பதாக IMDB தெரிவித்துள்ளது. இதனை, ஜனவரி 2014 – ஏப்ரல் 2024 வரையில் உள்ள வாராந்திர தரவரிசையின் அடிப்படையில், IMDB தெரிவித்துள்ளது. ஷாருக் கான் 2ஆவது இடத்தில் உள்ளார்.
News September 30, 2025
மக்களை பாதுகாப்பதில் TN அரசு தோல்வி: EPS

கரூர் துயரத்திற்கான பொறுப்பில் இருந்து தப்பிக்க ஸ்டாலின் அரசு முயல்வதாக EPS குற்றஞ்சாட்டியுள்ளார். ஏற்கெனவே அருணா ஜெகதீஷன் ஆணையம் விசாரிக்கும் நிலையில், வருவாய் செயலர் ஊடகங்களுக்கு பேட்டி அளிப்பதன் அவசியம் என்னவென்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மக்களை பாதுகாப்பதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க, விபத்துக்கான காரணத்தை பிறர்மீது சுமத்த வேண்டும் என்பதே அரசின் நோக்கமாக தெரிகிறது என்றும் EPS சாடியுள்ளார்.