News January 21, 2025

உண்ணாவிரதம் இருந்தாரா விஜய்? சேகர்பாபு கேள்வி

image

பரந்தூர் கிராம மக்களை நேரில் சென்று சந்தித்த விஜய், DMKவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுதொடர்பாக அமைச்சர் சேகர்பாபுவிடம் கேள்வி எழுப்பியதற்கு, அண்ணா ஹசாரே போல ஓராண்டு தொடர் உண்ணாவிரதம் இருந்துவிட்டா விஜய் களத்திற்கு சென்றார் என பதிலடி கொடுத்தார். அத்துடன், நேற்றைய நிகழ்வு நேற்றுடன் முடிந்துவிட்டதாகவும், இன்று தாங்கள் மக்கள் பணிக்கு வந்துவிட்டதாகவும் இதுவே திமுக அரசு என்றும் கூறினார்.

Similar News

News August 26, 2025

₹2000 வரை கட்டணம் உயர்வு.. மக்கள் அதிர்ச்சி

image

வி​நாயகர் சதுர்த்தி விடு​முறையையொட்டி, மக்கள் தங்களின் சொந்த ஊருக்கு படையெடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில், ஆம்னி பஸ்களில் இரண்டு மடங்கு ( ₹2000 வரை) கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுவதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். சென்னையில் இருந்து மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு ₹4,000 வரையும், சென்னையில் இருந்து திருச்சிக்கு ₹2,500 வரை வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

News August 26, 2025

மாதம் ₹210 கட்டுனா போதும், ₹5000 பென்ஷன் வாங்கலாம்..

image

வயதான பிறகு உங்களை நீங்களே பார்த்துக்கொள்ள இப்பவே பணம் சேமிக்கிறீங்களா? மாதம் வெறும் ₹210 கட்டினால், 60 வயதான பிறகு மாதம் ₹5000 பென்ஷனாக வழங்குகிறது அடல் பென்ஷன் யோஜனா ஸ்கீம். 18-40 வயதிற்குள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர அருகிலுள்ள வங்கி/தபால் நிலையத்திற்கு சென்று, APY படிவத்தை நிரப்பி உரிய ஆவணத்துடன் சமர்ப்பியுங்கள். இதற்கான தொகையை npscra.nsdl.co.in வழியாக செலுத்தலாம். SHARE IT.

News August 26, 2025

ஓஹோ.. இதுதான் விநாயகர் சதுர்த்தியின் கதையா!

image

மனிதர்களாலோ, விலங்குகளாலோ, ஆயுதங்களாலோ கொல்ல முடியாத வரம் பெற்றிருந்த கஜமுகாசுரனை விநாயகர் ஆவணி மாத சதுர்த்தி தினத்தில் வதம் செய்தார். அன்று முதல் ஆவணி மாத சதுர்த்தியில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் மக்கள் ஒன்றுகூட தடை இருந்த நிலையில், மக்களை திரட்ட எண்ணிய பாலகங்காதர திலகர், 1893-ல் இந்த பண்டிகையை சமூக நிகழ்வாக மாற்றி, இன்றைய கொண்டாடத்திற்கான வடிவத்தை கொடுத்தார்.

error: Content is protected !!