News March 12, 2025
செளந்தர்யா மரணத்தில் சதியா? கணவர் விளக்கம்

<<15730975>>நடிகை செளந்தர்யா <<>>மரணம் தொடர்பாக எழுந்த சர்ச்சைக்கு அவரது கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார். செளந்தர்யா மரணத்துக்கும், நடிகர் மோகன்பாபுவுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், தங்கள் நிலத்தை அவர் அபகரிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். கடந்த 2004இல் செளந்தர்யா பயணித்த ஹெலிகாப்டர் நடுவானில் வெடித்து சிதறியதில் அவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News March 12, 2025
வங்கதேச கிரிக்கெட் வீரர் மெஹ்முதுல்லா ஓய்வு

வங்கதேச கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டரான மெஹ்முதுல்லா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2021இல் டெஸ்ட்டில் இருந்தும், 2024இல் டி20இல் இருந்தும் ஓய்வு பெற்றார். எனினும் ODIஇல் தொடர்ந்து விளையாடினார். சாம்பியன்ஸ் டிராபி போட்டியிலும் விளையாடினார். இந்நிலையில், ODIஇல் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டெஸ்டில் 5, ODIஇல் 4 சதங்கள் அவர் விளாசியுள்ளார்.
News March 12, 2025
தீய சக்திகளின் கூடாரம் திமுக: அண்ணாமலை

தென்காசி பாஜக கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். தமிழகத்தில் ஊழல் கறை படியாத இடமே இல்லை என்பதுதான் திமுக அரசு செய்த சாதனை என விமர்சித்த அவர், தீய சக்திகளின் கூடாரமாக தமிழகம் மாறிவிட்டதாகவும் குற்றம்சாட்டினார். டாஸ்மாக் மூலமாக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி கிடைத்தாலும், தமிழகத்தை ரூ.9.5 லட்சம் கோடி கடனில் வைத்திருப்பதுதான் ஸ்டாலினின் செயல்திறன் எனவும் அவர் சாடினார்.
News March 12, 2025
பணவீக்க குறைவு வட்டி விகிதத்தை குறைக்கும்

கோவிட்டிற்கு பின் பணவீக்கம் கடுமையாக உயர்ந்ததால், ரெப்போ வட்டி விகிதத்தை RBI உயர்த்தியது. இதனால், வங்கிகளில் லோன் வாங்குவோர்/வாங்கியோர் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது பணவீக்கம் 3.61 சதவீதமாக சரிந்துள்ளதால், RBI ரெப்போ வட்டியை குறைக்க அதிக வாய்ப்புள்ளது. ஆகையால், நீங்கள் வாங்கிய வீட்டுக்கடனின் வட்டியும் குறையும், இனி நீங்கள் வாங்கப் போகும் லோனின் வட்டியும் குறையும்