News October 21, 2025
அரசியல் காரணத்தால் நீக்கப்பட்டாரா ரிஸ்வான்?

பாகிஸ்தான் ODI கேப்டன் பதவியில் இருந்து ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கு முன்னாள் வீரர் ரஷீத் லத்தீப் கூறிய கருத்துக்கள் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இஸ்ரேல்- பாலஸ்தீன் போரின் போது, ரிஸ்வான் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்ததன் காரணமாகவே அவர் நீக்கப்பட்டதாக லத்தீப் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையில், ரிஸ்வான் நீக்கப்பட்டதற்கான காரணம் குறித்து PCB இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
Similar News
News October 21, 2025
செங்கல்பட்டில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கடலூரை தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்டத்திலும் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரி, காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு விடப்பட்டுள்ளது. SHARE IT
News October 21, 2025
அதிமுக, திமுக மோதலுக்கு ஆந்திர அமைச்சர் பதில்

ஆந்திராவில் கூகுள் AI மையம் அமைவது தொடர்பான அதிமுக, திமுகவின் மோதலுக்கு, அம்மாநில அமைச்சர் நர லோகேஷ் பதிலளித்துள்ளார். தமிழரான கூகுள் CEO-ஐ முறையாக அணுக அரசு தவறிவிட்டதாக அதிமுக சாடிய நிலையில், பாஜக அழுத்தத்தால் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீட்டில் TN புறக்கணிக்கப்படுவதாக திமுக பதிலளித்தது. இதில், சுந்தர் பிச்சை இந்தியாவை (மாநிலம் பார்க்காமல்) தேர்வு செய்துள்ளதாக நர லோகேஷ் X-ல் பதிவிட்டுள்ளார்.
News October 21, 2025
நாளை பள்ளிகள் விடுமுறை.. முதல் மாவட்டமாக அறிவிப்பு

தமிழகம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், முதல் மாவட்டமாக கடலூரில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். ஏற்கெனவே புதுச்சேரி, காரைக்காலில் நாளை பள்ளி, கல்லூரிகள் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.