News March 21, 2024
கெஜ்ரிவால் இதனால் தான் கைது செய்யப்பட்டாரா?

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்கட்சியைச் சேர்ந்த பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்ட உடனே இந்த கைது சம்பவம் நடந்துள்ளது. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் குறித்த செய்தியை திசை திருப்புவதற்காகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
Similar News
News October 23, 2025
மழையில் பாழாகும் நெல் மூட்டைகள்… யார் பொறுப்பு?

கொள்முதலுக்கு வைக்கப்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து பாழாவதை கண்டு நெஞ்சம் பதறுகிறது. விவசாயிகள் கடன்பட்டு அறுவடை செய்ததை மழையில் இருந்து காப்பாற்ற ஒரு பாதுகாப்பான கிடங்கை கூட அரசால் கட்ட முடியாதா? ஒவ்வொரு கிடங்கிலும் 10,000 மூட்டைகள் பாதுகாப்பின்றி அழிகின்றனவாம். பசி போக்கும் உணவை பாதுகாக்க முடியவில்லை எனில், மாடல் ஆட்சிகளாலும், வல்லரசு பெருமையாலும் என்ன பயன் என மக்கள் கேட்கின்றனர்.
News October 23, 2025
CSK-வில் அஸ்வினுக்கு பதில் வாஷிங்டன் சுந்தர்

IPL-ல் இருந்து அஸ்வின் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பதில் வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்க CSK திட்டமிட்டுள்ளது. குஜராத் அணியும் ₹3.2 கோடிக்கு சுந்தரை டிரேட் செய்ய ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை சரியாக குஜராத்தால் பயன்படுத்த முடியவில்லை என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. சுந்தர் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் CSK-வுக்கு பலம் சேர்ப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News October 23, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: இடனறிதல் ▶குறள் எண்: 497
▶குறள்:
அஞ்சாமை அல்லால் துணைவேண்டா எஞ்சாமை
எண்ணி இடத்தால் செயின்.
▶பொருள்:ஒரு செயலுக்குரிய வழி முறைகளைக் குறையின்றிச் சிந்தித்துச் செய்யுமிடத்து, அஞ்சாமை ஒன்றைத் தவிர, வேறு துணை தேவையில்லை.