News April 25, 2025

பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய காரணம் இவர்தானா?

image

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பாவின் பங்கு இருப்பதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் கண்டறிந்ததாக தகவல் வெளிவந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்தபடி அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், துணை தலைவர் சைபுல்லாஹ் ஆகியோர் இத்தாக்குதலை வழிநடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இத்தாக்குதலுக்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன், உள்ளூர் கிளர்ச்சியாளர்களும் இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Similar News

News December 3, 2025

உலக தலைவர்கள் பயணிக்கும் விமானங்கள் PHOTOS

image

உலக நாடுகளின் அதிபர், பிரதமர் போன்ற மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்யும்போது உயர் பாதுகாப்பு இருக்க வேண்டியது அவசியம். இதற்காக, அவர்களுக்கு சிறப்பு விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. எந்தெந்த நாடுகள் என்ன விமானங்களை பயன்படுத்துகின்றன மற்றும் அதன் பெயர் என்ன ஆகியவற்றை மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News December 3, 2025

மீண்டும் சதம் அடித்து அசத்திய விராட் கோலி

image

இக்கட்டான நிலையில் களமிறங்கிய விராட் கோலி SA-வுக்கு எதிரான ODI தொடரில் 2-வது சதத்தை அடித்து அசத்தியுள்ளார். தொடக்கத்தில் நிதானமாக விளையாடிய விராட், 70 ரன்களை கடந்தவுடன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கடந்த போட்டியில் சதம் அடித்து இந்தியா 350 ரன்களை எட்ட உதவியது போல், இதிலும் இமாலய இலக்கை எட்ட தொடர்ந்து விளையாடி வருகிறார்.

News December 3, 2025

ஏக்கருக்கு ₹40,000 இழப்பீடு வழங்க வேண்டும்: அன்புமணி

image

தமிழ்நாட்டில் மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹8,000 வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில், சம்பா, தாளடி பயிர்களுக்கு விவசாயிகள் இதுவரை ஏக்கருக்கு ₹30,000 வரை செலவு செய்திருக்கும் நிலையில், அரசின் நிவாரணம் போதாது என அன்புமணி தெரிவித்துள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!