News April 25, 2025
பஹல்காம் தாக்குதலுக்கு முக்கிய காரணம் இவர்தானா?

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில், லஷ்கர்-ஏ-தொய்பாவின் பங்கு இருப்பதாக இந்திய புலனாய்வு வட்டாரங்கள் கண்டறிந்ததாக தகவல் வெளிவந்துள்ளன. பாகிஸ்தானில் இருந்தபடி அந்த அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத், துணை தலைவர் சைபுல்லாஹ் ஆகியோர் இத்தாக்குதலை வழிநடத்தியதாக குறிப்பிடப்படுகிறது. மேலும், இத்தாக்குதலுக்கு வெளிநாட்டு பயங்கரவாதிகளுடன், உள்ளூர் கிளர்ச்சியாளர்களும் இணைந்து செயல்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Similar News
News November 7, 2025
ராஜினாமா பண்ணலாம்னு இருந்தேன்: சத்யபாமா

ஒருங்கிணைப்பு பற்றி பேசியதால்தான் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக Ex MP சத்யபாமா தெரிவித்துள்ளார். தானே ராஜினாமா கடிதம் கொடுக்க இருந்ததாகவும், அதற்குள் EPS கட்சியில் இருந்து நீக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நல்லது சொன்னால் அனைவரையும் கட்சியில் இருந்து நீக்குவதாகவும், EPS-ன் இந்த நடவடிக்கைகளுக்கு பயந்து யாரும் கருத்துகளை சொல்வதில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News November 7, 2025
₹44,900 சம்பளம்.. மத்திய அரசில் 258 காலியிடங்கள்!

உளவுத்துறையில் காலியாக உள்ள 258 Assistant Central Intelligence Officer பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ✦வயது: 18- 27 ✦கல்வித்தகுதி: கம்ப்யூட்டர் தொடர்பான இன்ஜினியரிங் டிகிரி ✦சம்பளம்: ₹44,900 ✦விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 16 ✦முழு தகவலுக்கு <
News November 7, 2025
‘ஒவ்வொருவருக்கும் ₹5,000 கொடுக்க திமுக திட்டம்’

ஒவ்வொரு ஓட்டுக்கும் ₹5,000 கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும், ₹50,000 கொடுத்தாலும் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்றும் RB உதயகுமார் தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள SIR-ல் எந்த குழப்பமும் இல்லை. ஆனால், அதில், திமுக முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது எனவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், SIR படிவங்களை திமுகவினர் பெற ஆர்வம் காட்டுவது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.


