News October 21, 2025
போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்: EPS

தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதனால் சென்னை உள்பட வட கடலோர மாவட்டங்களுக்கு <<18061217>>மழை<<>> எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு EPS வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களும் IMD அறிவிப்புகளின் அடிப்படையில், பாதுகாப்போடு இருக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
Similar News
News October 21, 2025
நெல் கொள்முதல்.. CM முக்கிய ஆலோசனை

நெல் கொள்முதல் தொடர்பாக அரசு அதிகாரிகளுடன் CM ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17%ல் இருந்து 22% ஆக தளர்த்துவதற்கு மத்திய அரசின் ஒப்புதலை பெற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், கனமழை எதிரொலியாக டெல்டா மாவட்டங்களில் நெல் கொள்முதல் பணிகளை துரிதப்படுத்தவும், நெல் மூட்டைகளை கிடங்குகளுக்கு விரைந்து கொண்டு செல்லவும் CM அறிவுறுத்தியுள்ளார்.
News October 21, 2025
தீபாவளி விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு உச்சம்

தீபாவளி விற்பனை இதுவரை இல்லாத அளவிற்கு ₹5.40 லட்சம் கோடிக்கு வர்த்தகமாகியுள்ளதாக CIAT தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ₹4.25 லட்சம் கோடிக்கு விற்பனையான நிலையில், இந்த ஆண்டு 25% அதிகரித்துள்ளது. இது, பலகாரங்கள், ஆடை, காலணி, வீட்டு அலங்கார பொருள்கள், அன்றாடம் தேவைப்படும் பொருள்கள் உள்ளிட்டவற்றின் விற்பனையை கொண்டு கணக்கிடப்படுகிறது. GST சீர்திருத்தம் இந்த விற்பனை அதிகரிப்புக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
News October 21, 2025
மனைவியை பிரிந்தாரா சேவாக்?

EX கிரிக்கெட் வீரர் சேவாக், அவரது மனைவி ஆர்த்தியை பிரிந்துவிட்டதாக கடந்த சில நாள்களாக தகவல் பரவி வருகிறது. இந்த சூழலில், தீபாவளியை முன்னிட்டு அவர் தனது குழந்தைகள், தாயாருடன் எடுத்த போட்டோக்களை SM-ல் பதிவிட்டுள்ளார். அதேபோல், ஆர்த்தி வெளியிட்ட பதிவில் சேவாக் இடம்பெறவில்லை. இதையடுத்து விவாகரத்து தகவல் உண்மைதான் என நெட்டிசன்கள் கூறுகின்றனர். அவர் கடைசியாக 2023-ல் மனைவியுடன் புகைப்படம் வெளியிட்டார்.