News July 4, 2024
பொதுத்துறை செயலாளருக்கு எதிராக பிடிவாரண்ட்

சுதந்திர போராட்ட வீரருக்கு ஓய்வூதிய பாக்கியை வழங்காததால், தமிழக பொதுத்துறை கூடுதல் செயலாளருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஒய்வூதிய பாக்கியை வழங்கக்கோரி 2022இல் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும், அதை அரசு செயல்படுத்தவில்லை என சுதந்திர போராட்ட தியாகி வேலு (97 வயது) நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் தற்போது அதிரடி உத்தரவிட்டுள்ளது.
Similar News
News September 22, 2025
சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள்!

முதல் உலகப்போரில், சென்னை மீது குண்டுமழை பொழியப்பட்ட நாள் இன்று. செப்டம்பர் 22, 1914-ல் ஜெர்மனியின் ‘எம்டன்’ கப்பல், சென்னை துறைமுகத்தின் மீது 130 குண்டுகளை வீசியது. இதில், எண்ணெய் கிடங்குகள் வெடித்து சிதறின. ஐகோர்ட் சுற்றுச்சுவரும் சரிந்து விழுந்தது. இந்த சம்பவத்தின் கூடுதல் சுவாரசியம் என்னவென்றால், தாக்குதல் நடத்தியது செண்பகராமன் என்ற இந்திய பொறியாளர்தான்.
News September 22, 2025
அக்.1 முதல் பரப்புரையை தொடங்கும் நயினார்..!

இபிஎஸ், விஜய் வரிசையில் தேர்தல் சுற்றுப் பயணத்தை நயினார் நாகேந்திரன் அக்.1 முதல் தொடங்கவுள்ளார். ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயிலில் இருந்து சுற்றுப்பயணத்தை அவர் தொடங்குவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு 3 தொகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்வார் என்றும் 3-வது தொகுதியில் பொதுக்கூட்டம் நடைபெறும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நயினார் பரப்புரை NDA-க்கு கைகொடுக்குமா?
News September 22, 2025
கருணாநிதி சிலையை நிறுவ அனுமதி மறுப்பு

நெல்லையில் வள்ளியூர் சந்தை அருகே Ex CM கருணாநிதியின் சிலையை நிறுவ அனுமதி கோரிய TN அரசின் மனுவை SC தள்ளுபடி செய்தது. முன்னதாக, மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கூறி சிலை வைப்பதற்கு சென்னை HC மறுப்பு தெரிவித்திருந்தது. இதனையடுத்து, தமிழக அரசு SC-ல் மேல்முறையீடு செய்தது. இந்நிலையில், மக்களுக்கு இடையூறு ஏற்படும் என கருதி சென்னை HC அளித்த உத்தரவில், தலையிட விரும்பவில்லை என SC தெரிவித்துள்ளது.