News August 3, 2024
SBI வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை!

SBI வாடிக்கையாளர்களிடம் ரிவார்ட் பாயிண்ட் என்ற பெயரில் சைபர் கிரைம் குற்றவாளிகள் மோசடி செய்து வருகின்றனர். அக்கவுண்ட்டில் ரிவார்டு பாயிண்டுகள் கிடைத்துள்ளதாகவும், அவற்றைப் பெற SBI Rewards ஆஃபை பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் பயனர்களுக்கு ஒரு APK ஃபைல் அனுப்பப்படுகிறது. ஆனால், இது பொய் செய்தி என்றும், அந்த ஆஃபை பதிவிறக்கம் செய்து பணத்தை இழக்க வேண்டாம் என்றும் PIB Fact Check எச்சரித்துள்ளது.
Similar News
News December 10, 2025
திருப்பரங்குன்றம் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா மற்றும் பெரிய வீதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, வெடிகுண்டு நிபுணர்கள் அங்கு தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரம் SC வரை சென்றுள்ள நிலையில், இந்த வெடிகுண்டு மிரட்டல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
News December 10, 2025
சுபகாரியங்களுக்கு வாழை மரம் கட்டுவது ஏன்?

சுபகாரியங்கள் நடைபெறும் இடங்களிலும், கல்யாண வீடுகளிலும் முகப்பு பந்தலில் வாழை மரம் கட்டுவது தமிழர்களின் வழக்கம். அதில் வாழைப்பழ குலையும் தொங்கும். இதற்கான காரணம் தெரியுமா? வாழையடி வாழையாக குலம் தழைத்து வாழவேண்டும் என்ற அடிப்படையில் அவ்வாறு செய்யப்படுகிறது. மேலும், வாழையின் இலை, பூ, காய், கனி என எல்லாமும் பயன்படுவது போல, நாமும் பயனுள்ள வாழ்க்கையை வாழ வேண்டும் என்பது அர்த்தமாகும்.
News December 10, 2025
வார்னிங்: ஆதார் ஜெராக்ஸ் கொடுக்க வேண்டாம்..

ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட சில நிறுவனங்கள், ஆதார் நகலை பெற்று சேமித்து வைக்கும் பழக்கத்தை கொண்டுள்ளன. இதனால் தரவுகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாவதாக UIDAI கருதுகிறது. இந்நிலையில், இனி எந்தவொரு இடத்திலும் நீங்கள் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டாம். அதற்கு பதிலாக QR கோட் ஸ்கேனிங், பயோமெட்ரிக் உள்ளிட்ட ஆன்லைன் செயல்பாடுகள் மூலம் ஆதார் சரிபார்க்கப்படும். இந்த செயல்முறை விரைவில் அமலுக்கு வரவுள்ளது.


