News May 7, 2025
தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்; அதை மீறினால் உடனே நடவடிக்கை பாயும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.
Similar News
News December 12, 2025
திமுகவால் துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது: EPS

<<18545239>>மேகதாது<<>> அணை கட்டுவதற்கான பணிகளை செய்ய கர்நாடக அரசு குழு அமைத்துள்ளது. இந்த விவகாரத்தில் திமுக அரசு ஏனோ தானோ என்று செயல்பட்டதால் இந்த துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக EPS விமர்சித்துள்ளார். திமுக தனது சுயலாபத்துக்காக கர்நாடக காங்., அரசுக்கு லாலி பாடும் போக்கை கடைப்பிடித்து வருவதாகவும் சாடியுள்ளார். இனியாவது காவிரியில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என CM ஸ்டாலினை EPS வலியுறுத்தியுள்ளார்.
News December 12, 2025
முதலிரவில் மணப்பெண்ணுக்கு அதிர்ச்சி

உ.பி.யில் பல கனவுகளுடன் முதலிரவு அறையில் நுழைந்த இளம்பெண்ணுக்கு, கணவன் கூறிய ரகசியம் இடியாய் விழுந்தது. ‘நான் ஆண்மையற்றவன், என்னால் உறவில் ஈடுபட முடியாது’ என்று கணவன் சொல்ல, அதிர்ச்சியடைந்த பெண் பெற்றோரிடம் சொல்லிவிட்டார். மருத்துவ பரிசோதனையும் அதனை உறுதிப்படுத்த, மூன்றே நாளில் அப்பெண் விவாகரத்து கோரியுள்ளார். அத்துடன் கல்யாணத்துக்கு செலவு செய்த ₹7 லட்சத்தையும் திருப்பிக் கேட்டுள்ளார்.
News December 12, 2025
சிறுமிகளுக்கு இலவச HPV தடுப்பூசி

TN அரசின் HPV தடுப்பூசி திட்டத்தால் 3.3 லட்சம் சிறுமிகள் பயனடைவார்கள் என அமைச்சர் மா.சு தெரிவித்துள்ளார். அரியலூர், பெரம்பலூர், தி.மலை, தருமபுரியில் கருப்பைவாய் கேன்சர் பாதிப்பு அதிகம் கண்டறியப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக அம்மாவட்டங்களில் தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். சிறுமிகளுக்கு (9-14 வயது) இலவச தடுப்பூசி செலுத்த ₹36 கோடி ஒதுக்கியுள்ளதாகவும் அவர் பேசியுள்ளார்.


