News May 7, 2025

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை

image

தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரித்துள்ளார். தனியார் பள்ளிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்; அதை மீறினால் உடனே நடவடிக்கை பாயும் என திட்டவட்டமாக தெரிவித்தார்.

Similar News

News November 13, 2025

விஜயகாந்த் வீட்டில் போலீஸ் குவிப்பு.. பதற்றம் உருவானது

image

சமீப காலமாக, அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள் ஆகியோரின் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இன்று, பிரேமலதா விஜயகாந்த் வீட்டுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸ் குவிக்கப்பட்டு அங்கு சோதனை நடைபெற்றது. ஆனால் இது புரளி என்பது சோதனையில் தெரியவந்தது. ரஜினி, ரம்யா கிருஷ்ணன், KS ரவிக்குமார், சாக்‌ஷி உள்ளிட்டோர் வீடுகளுக்கும் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

News November 13, 2025

ONGC-ல் வேலை.. விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

ONGC-ல் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 18- 24 வயதுக்குட்பட்ட 10-வது, 12-வது, ITI, டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். Merit List & Certificate Verification மூலம் தேர்ச்சி நடைபெறும். ₹8,200- ₹12,300 வரை மாதச்சம்பளம் வழங்கப்படும். முழு விவரங்களுக்கு <>இங்கே <<>>கிளிக் செய்யவும். வரும் நவம்பர் 17-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

News November 13, 2025

ஆம்னி பஸ் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்: EPS

image

தமிழகத்தில் ஆம்னி பஸ் வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆம்னி பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகளை உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வு காண அரசை, EPS வலியுறுத்தியுள்ளார். அண்டை மாநிலங்கள் அபராதம் விதிப்பதால், தமிழக ஆம்னி பஸ்கள் கடந்த 9-ம் தேதி முதல் வெளிமாநிலங்களுக்கு இயக்கப்படாமல் உள்ளதாக கூறிய அவர், இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!