News May 8, 2025
போர் பதற்றம் எதிரொலி: விமானங்கள் ரத்து

போர் பதற்றம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 5 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், நாடுமுழுவதும் விமான சேவைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 7, 2025
CM ஸ்டாலின் பதவி விலக வேண்டும்: தமிழிசை

கோவை மாணவி வழக்கை சுட்டிக்காட்டி, தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என தமிழிசை குற்றம்சாட்டியுள்ளார். பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியவில்லை என்றால் CM ஸ்டாலின் பதவி விலக வேண்டும் எனவும், பெண்கள் ஆயுதம் எடுக்கும் சூழல் தமிழகத்திற்கு வந்துள்ளதாகவும் கூறியுள்ளார். குற்றவாளிகள் எல்லாம் திமுகவுடன் தொடர்புடையவர்களாக இருப்பதால், போலீசார் நடவடிக்கை எடுக்க தயங்குவதாகவும் சாடியுள்ளார்.
News November 6, 2025
அரைஞாண் கயிறு கட்டுவதில் இப்படி ஒரு சிக்கலா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அரைஞாண் கயிறு கட்டுவது நம்முடைய பாரம்பரிய வழக்கம். அதில் பல நன்மைகள் இருந்தாலும் குழந்தைகளுக்கு சில பாதிப்புகளையும் அது ஏற்படுத்துமாம். அரைஞாண் கயிறை வருஷக் கணக்கில் இடுப்பில் கட்டுவதால் அதில் அழுக்குகள் கிருமிகள் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்தும் என டாக்டர்கள் கூறுகின்றனர். அதனால் நூல் கயிறை தவிர்த்து வெள்ளியில் அணிவது நல்லது என தெரிவிக்கின்றனர்.
News November 6, 2025
நாளை அனைத்து பள்ளிகளுக்கும் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, +2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான பெயர் பட்டியலில் திருத்தம் செய்ய நாளையே(நவ.7) கடைசி நாளாகும். மாணவர்களின் விவரங்களை பிழையின்றி திருத்தம் செய்து பதிவேற்றுவதை உறுதி செய்யுமாறு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT


