News May 8, 2025
போர் பதற்றம் எதிரொலி: விமானங்கள் ரத்து

போர் பதற்றம் எதிரொலியாக சென்னை விமான நிலையத்தில் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தீவிரவாத முகாம்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் இருந்து செல்ல வேண்டிய 5 விமானங்களும், சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல், நாடுமுழுவதும் விமான சேவைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Similar News
News October 13, 2025
விஜய் நிச்சயம் பதில் சொல்ல வேண்டும்: TKS இளங்கோவன்

விஜய் ஏன் 7.5 மணி நேரம் தாமதமாக வந்தார் என்பதற்கு இன்னும் தவெக தரப்பில் பதில் அளிக்கவில்லை என டிகேஎஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார். விஜய் சொன்ன நேரத்துக்கு கரூர் சென்றிருந்தால் அசம்பாவிதமே நடந்திருக்காது எனவும், 41 உயிர்கள் பறிபோனதற்கு முக்கிய காரணம் தவெகதான் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். தாமதத்திற்கான காரணம் குறித்து அவர் பதில் சொல்லும் வரை விடப்போவதில்லை எனவும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
News October 13, 2025
தமிழக மீனவர்கள் மீது கடற்கொள்ளையர் தாக்குதல்!

கோடியக்கரை அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் 21 பேர் மீது, இலங்கை கடற்கொள்ளையர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற்படையினர் ஒருபுறம், கடற்கொள்ளையர் மறுபுறம் என தினந்தோறும் தொல்லை கொடுப்பதாக மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். முன்னதாக, கடந்த வாரம் ராமேஸ்வரம் மீனவர்கள் 47 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்ததை கண்டித்து, அங்கு 3-வது நாளாக வேலைநிறுத்த போராட்டம் தொடர்கிறது.
News October 13, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் ₹7,000 உயர்வு.. புதிய உச்சம் தொட்டது

தங்கத்தை விட கூடுதல் மடங்கு விலையேற்றத்தை சந்தித்து வருகிறது வெள்ளி. இன்று ஒரே நாளில் வெள்ளி விலை கிலோவுக்கு ₹7,000 அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தற்போது, வெள்ளி 1 கிராம் ₹197-க்கும், 1 கிலோ ₹1.97 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் வெள்ளி கிலோவுக்கு ₹20,000 அதிகரித்திருப்பது நடுத்தர மக்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.