News April 25, 2025
பாகிஸ்தான் மீது போர் தேவையற்றது: திருமாவளவன்

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் துணை போகுமேயானால், அதனை உலக அளவில் அம்பலப்படுத்த வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார். அவர்களை அந்நியப்படுத்த வேண்டுமே தவிர, அவர்களுக்கு எதிரான யுத்தம் தேவையற்றது என்றும் அவர் கூறியுள்ளார். ஜாதி, மதம், இனம், மொழி ஆகிய பாகுபாடு அல்லாமல், இந்தியர் என்ற உணர்வோடு நாம் அனைவரும் பயங்கரவாதத்தை எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
Similar News
News April 26, 2025
மத்தியஸ்தம் செய்யத் தயார்.. ஈரான் அறிவிப்பு

இந்தியாவும், பாகிஸ்தானும் எங்களின் சகோதர நாடுகள் எனத் தெரிவித்துள்ள ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் சையீது அப்பாஸ் அராச்சி, இரு நாடுகளிடையே பதற்றத்தை தணிக்க மத்தியஸ்தம் செய்யத் தயார் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, சிந்து நதி நீர் நிறுத்தம், அட்டாரி – வாகா எல்லை மூடல், தூதர்கள் வெளியேற்றம், துப்பாக்கிச்சூடு என இந்தியாவின் அடுத்தடுத்த நடவடிக்கைகளால் போர் பதற்றம் நிலவுகிறது.
News April 26, 2025
இந்தியா, பாக். துப்பாக்கி சண்டை.. எல்லையில் பதற்றம்

இந்தியா, பாக். ராணுவம் இடையே எல்லையில் 2வது நாளாக துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது. பஹல்காம் தாக்குதலை பாக். தீவிரவாதிகள் நடத்தியதாக இந்தியா சந்தேகிக்கிறது. இதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் அச்சத்தில் உள்ள பாக், எல்லையில் உள்ள இந்திய நிலைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய வீரர்களும் தகுந்த பதிலடி கொடுத்து வருகின்றனர்.
News April 26, 2025
பாகிஸ்தானுடன் எத்தனை பார்டர் கிராஸிங் உள்ளன?

பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து, இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே பெரும் பதற்றம் நிலவுகிறது. உடனடியாக இந்திய அரசு, வாகா – அத்தாரி எல்லையை மூடி உத்தரவிட்டுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே 3 முக்கிய ரோட் பார்டர் கிராஸிங் உள்ளன. ➙வாகா எல்லை ➙கர்தர்பூர் எல்லை ➙கந்தா சிங் வாலா எல்லை ஆகியவை உள்ளன. இதில் கர்தர்பூர் எல்லை இன்னும் சீக்கியர்களின் வழிபாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.