News October 18, 2025

‘யுத்த நாயகன்’ காலமானார்

image

நாட்டுக்காக 3 போர்களில் பங்கேற்று ‘War Hero’என புகழ்பெற்ற கரோடி திம்மப்பா ஆல்வா(85) காலமானார். மங்களூருவில் பிறந்த இவர், 1971 போரின்போது, தாக்குதலுக்கு ஆளாகி சிட்டகாங் வனப்பகுதியில் உயிருக்கு போராடி மீண்டு வந்தார். தனது போர் அனுபவங்களை ‘Garodi Maneyinda Sena Garadige’ புத்தகமாக எழுதியுள்ளார். மக்கள் சேவையில் ஆர்வம் கொண்ட அவர் தனது உடலையும், KS ஹெக்டே மருத்துவ அகாடமிக்கு தானம் செய்துள்ளார். #RIP

Similar News

News October 18, 2025

அவைக்குறிப்பில் தீபாவளி வாழ்த்து நீக்கம்: வானதி

image

இதுவரை தீபாவளிக்கு வாழ்த்து கூற மறுத்தவர்கள், ‘தீபாவளி வாழ்த்து சொல்லுங்கள்’ என்று கேட்கக்கூட அனுமதி மறுப்பதாக வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், தீபாவளி வாழ்த்து கூறுங்கள் என்று பேசியதை கூட அவைக்குறிப்பில் இருந்து நீக்கியுள்ளனர் என்றார். இதைவிட பாசிசம் வேறேதும் இருக்க முடியாது என்றும் விமர்சித்தார். திமுக தரப்பில் தீபாவளி வாழ்த்து கூறாதது தொடர்ந்து விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது.

News October 18, 2025

பங்கு சந்தையில் AI அபாயம்: நிபுணர்கள் எச்சரிக்கை!

image

AI துறையில் உள்ள நிறுவன பங்குகளின் விலை மிக அதிகமாக ஏறுவதால், உலக பங்கு சந்தையில் விரைவில் ஒரு பெரிய சரிவு வரலாம் என்றும் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சில Tech நிறுவன பங்குகள் அதிக மதிப்பில் இருப்பது, சந்தை சில நிறுவனங்களை சார்ந்து இயங்குவது, ஆட்டோமேட்டிக் வர்த்தகம் வணிகத்தை வீழ்ச்சியடைய செய்யும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, பல துறைகளில் முதலீடு செய்ய அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

News October 18, 2025

சற்றுமுன்: விலை தாறுமாறாக மாறியது

image

தீபாவளியையொட்டி, கோயம்பேடு, தோவாளை, மாட்டுத்தாவணி உள்ளிட்ட மலர்ச் சந்தைகளில் பூக்களின் விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது. 1 கிலோ மல்லிகைப்பூ ₹2,500, கனகாம்பரம் ₹2,000 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், முல்லை, காக்கரட்டான் ஆகியவை ₹1,500-க்கும், பிச்சி பூ ₹1,200-க்கும் விற்கப்படுகிறது. தீபாவளிக்கு பிறகே விலை சரியும் வணிகர்கள் கூறுகின்றனர். தங்கம் மட்டுமல்ல, பூக்கள் கூட வாங்க முடியாது போலயே..!

error: Content is protected !!