News April 13, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்

வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி விஜய் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
Similar News
News December 20, 2025
பூமியின் முதல் உயிரினம் எது தெரியுமா?

பூமியில் மனிதர்கள், டைனோசர்களுக்கு பல கோடி ஆண்டுகள் முன்பே தோன்றிய முதல் உயிரினம் பற்றிய கேள்விக்கு விடை தேடி வந்த விஞ்ஞானிகள், ஓமன் மற்றும் இந்திய பாறைகளில் ஒரு வியக்க வைக்கும் உண்மையை கண்டறிந்தனர். கடல்களில் உள்ள கடற்பஞ்சுகளின் மூதாதையர்கள் தான் பூமியின் முதல் விலங்குகள் என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்தனர். சுமார் 54.1 கோடி ஆண்டுகளுக்கு முன்பே இவை கடலில் வாழ்ந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
News December 20, 2025
PM மோடியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல்!

மேற்கு வங்க மாநிலம் தாஹேர்பூருக்கு புறப்பட்ட PM மோடியின் ஹெலிகாப்டர் மீண்டும் கொல்கத்தா திரும்பியுள்ளது. மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பாதுகாப்பு கருதி ஹெலிகாப்டர் திருப்பி விடப்பட்டுள்ளது. முன்னதாக தாஹேர்பூரில் நடைபெறவுள்ள பாஜகவின் பொதுக்கூட்டத்திற்கு சென்ற <<18621174>>பாஜக தொண்டர்கள் 4 பேர்<<>> ரயில் மோதி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
PM மோடியை காண சென்ற BJP தொண்டர்கள் பலி

கொல்கத்தா அருகே ரயில் மோதிய விபத்தில், 4 BJP தொண்டர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தஹெர்பூரில் நடக்கும் PM மோடியின் பேரணியில் பங்கேற்க 40 BJP தொண்டர்கள் பஸ்ஸில் சென்றனர். சிறிது ஓய்வெடுக்க, கிருஷ்ணாநகர்-ரணகாட் ரயில்வே கிராஸிங் பகுதியில் அவர்கள் பஸ்ஸில் இருந்து இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக ரயில் மோதி தூக்கி வீசப்பட்டனர். பனிப்பொழிவால் ரயில் வந்தது கூட அவர்களுக்கு தெரியவில்லை என கூறப்படுகிறது.


