News April 13, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: எதிர்த்து வழக்கு தொடர்ந்தார் விஜய்

வக்ஃப் (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தலைவர் விஜய் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார். அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்ஃப் மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு சட்டமானது. இந்த சட்டம் இஸ்லாமியர்களுக்கு எதிராக இருப்பதாக நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்நிலையில், வக்ஃப் சட்டத் திருத்தத்தை ரத்து செய்யக் கோரி விஜய் சுப்ரீம் கோர்ட்டை நாடியுள்ளார்.
Similar News
News December 16, 2025
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலின் சார்ஜ் ஷீட் தாக்கல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான குற்றப்பத்திரிகையை ஜம்மு சிறப்பு கோர்ட்டில் NIA தாக்கல் செய்தது. 1597 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையில், லஷ்கர் – இ – தொய்பா அமைப்பு மற்றும் அதன் நிழல் அமைப்பான எதிப்பு முன்னணி உள்பட 7 பேருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலில் தொடர்புடைய 3 பயங்கரவாதிகளை ஆபரேஷன் மகாதேவ் மூலம் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
News December 16, 2025
வரலாற்றில் இன்று

*1770–இசைமேதை பீத்தோவன் பிறந்தநாள்.
*1928 – சென்னை மாகாண முதல் CM பனகல் அரசர் நினைவு நாள்.
*1971 – போரில் இந்தியா ராணுவத்திடம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர்.
*1971 – பிரிட்டனிடம் இருந்து பஹ்ரைன் அரசு விடுதலை பெற்றது.
*1991 – சோவியத் யூனியனில் இருந்து கஜகஸ்தான் விடுதலை பெற்றது.
News December 16, 2025
IPL மினி ஏலத்தின் பட்டியலில் கடைசி நேரத்தில் டுவிஸ்ட்

IPL-ன் மினி ஏலம் அபுதாபியில் இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெற உள்ளது. கடைசி நேரத்தில் அபிமன்யூ ஈஸ்வரன் உள்பட 19 வீரர்களின் பெயர்கள் ஏலப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் சேர்த்து ஏலத்தில் உள்ள வீரர்களின் எண்ணிக்கை 369-ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 77 பேரை மட்டும் IPL அணிகளால் எடுக்க முடியும். CSK(43) மற்றும் KKR (64) அதிக தொகையுடன் ஏலத்திற்குள் நுழைகின்றன.


