News April 16, 2025
வக்ஃப் சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. AIMIM MP அசாதுதீன் ஒவைசி, AAP தலைவர் அமானத்துல்லா கான், RJD தலைவர் மனோஜ் குமார் ஜா உள்பட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. திமுக, தவெக, YSR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முறையிட்டுள்ளன.
Similar News
News December 31, 2025
பொங்கல் பரிசு.. இரட்டிப்பு இனிப்பான செய்தி

பொங்கல் பரிசு பற்றிய இனிப்பான அறிவிப்பை புத்தாண்டு பரிசாக இன்று CM ஸ்டாலின் அறிவிப்பார் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முக்கியமாக பரிசுத் தொகையாக ₹3,000 வழங்கப்படலாம் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இதன் மூலம் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு, முந்திரி, உலர் திராட்சை அடங்கிய பொங்கல் தொகுப்புடன், பரிசுத் தொகையும் வழங்கப்படலாம்.
News December 31, 2025
நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம் தெரியுமா

‘123PAY UPI’ மூலம் நெட் இல்லாமலும் பணம் அனுப்பலாம். ‘8045163666’ என்ற நம்பருக்கு கால் பண்ணுங்க. சேவையை தேர்வு செய்து, யாருக்கு பணம் அனுப்ப வேண்டுமோ, அவர்களின் போன் நம்பர் & எவ்வளவு பணம் என்பதையும் உள்ளிடவும். இதனை தொடர்ந்து UPI பரிவர்த்தனை செய்வதற்கான Confirmation call வரும். தகவல்களை சரிபார்த்து, UPI PIN எண்ணை கொடுத்தால், பணம் அனுப்பப்பட்டு விடும். இப்பதிவை நண்பர்கள் அனைவருக்கு ஷேர் பண்ணுங்க.
News December 31, 2025
பொங்கல் கரும்பை நேரடியாக கொள்முதல் செய்க: அன்புமணி

பொங்கல் பரிசு தொகுப்பு குறித்தோ, அதில் கரும்பு இடம்பெறுமா என்பது குறித்தோ இதுவரை அறிவிப்பு வெளியாகவில்லை என அன்புமணி விமர்சித்துள்ளார். பன்னீர் கரும்பை கொள்முதல் செய்வதில் உள்ள குளறுபடிகளால், விவசாயிகளின் வலி அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எனவே, அரசே நேரடியாக கரும்புகளை கொள்முதல் செய்வதோடு, தொகுப்பில் வழங்கும் கரும்புகளின் எண்ணிக்கையை 2-ஆக அதிகரிக்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.


