News April 16, 2025
வக்ஃப் சட்டம்: சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை

வக்ஃப் சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா, நீதிபதிகள் சஞ்சய் குமார், கே.வி.விஸ்வநாதன் அடங்கிய அமர்வு விசாரிக்கிறது. AIMIM MP அசாதுதீன் ஒவைசி, AAP தலைவர் அமானத்துல்லா கான், RJD தலைவர் மனோஜ் குமார் ஜா உள்பட 10 பேர் தாக்கல் செய்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறது. திமுக, தவெக, YSR காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் முறையிட்டுள்ளன.
Similar News
News October 21, 2025
கற்றாழையை உணவில் சேர்த்தல் இத்தனை நன்மைகள்

ஒரு குளிர்ந்த கற்றாழை ஜூஸ் உங்கள் செரிமானத்தை தூண்டி, தோலில் ஒளிரும் அழகை தரும். மேலும் உணவின் ஒரு பாகமாக இதை சேர்க்கும் போது பல நன்மைகள் கிடைக்கும்.*கற்றாழை ஜெல்லை உணவில் சேர்த்தால், குடல் சுத்தமாகி செரிமானம் சீராகும். குடல் இயக்கத்தையும் இது தூண்டும். *கற்றாழை உடலில் சேமிக்கப்பட்ட கொழுப்புகளை கரைக்க உதவுகிறது. *கற்றாழை இயற்கையான டிடாக்ஸாக செயல்பட்டு, கல்லீரலை சுத்தமாக வைத்திருக்கிறது.
News October 21, 2025
புதுவீட்டில் தீபாவளியை கொண்டாடிய சமந்தா

கியூட் ரியாக்ஷன்களில் நம்மை கொள்ளைகொள்ளும் சமந்தா, தீபாவளியை கோலகலமாக கொண்டாடியுள்ளார். மும்பையில் புதிதாக அபார்ட்மெண்ட் வாங்கி செட்டிலான அவர், அங்கு தீபாவளியை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். தீபாவளி கொண்டாட்டத்தின் போது எடுத்த போட்டோஸ் உடன், தனது வீட்டின் புகைப்படங்களை சமந்தா இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். மேலே உள்ள அந்த போட்டோஸை SWIPE செய்து பாருங்கள்.
News October 21, 2025
வக்கற்ற ஆட்சி நடத்தியவர் EPS: அமைச்சர் சக்கரபாணி

நெல்கொள்முதலை திமுக அரசு சரியாக செய்யவில்லை என<<18051682>> EPS குற்றம்சாட்டிய <<>>நிலையில் அமைச்சர் சக்கரபாணி அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். உண்மைக்கு மாறாக அரசின் நெல் கொள்முதல் சாதனையை மறைக்கும் வகையில் EPS அவதூறு பரப்புவதாக அவர் சாடியுள்ளார். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் நெல்லுக்கான மாநில அரசின் ஊக்கத் தொகையை ஒரு பைசா கூட உயர்த்த வக்கற்ற ஆட்சி நடத்தியவர் என்றும் விமர்சித்துள்ளார்.