News April 3, 2025
வக்ஃப் சட்ட (திருத்த) மசோதா: பாஜக செய்யும் மாற்றம் என்ன?

வக்ஃப் சட்ட திருத்தத்தின்படி, வக்ஃப் வாரியம் தன் சொத்துகளை மாவட்ட கலெக்டர்களிடம் பதிவு செய்யவேண்டும். இதனால் சரியான மதிப்பீட்டை செய்யமுடியும். தற்போது வக்ஃப் உறுப்பினர்கள் அனைவரும் தேர்ந்தெடுக்கப் படுகின்றனர். இனி அனைத்து உறுப்பினர்களும் அரசால் பரிந்துரைக்கப்படுவர். தலைமை செயல் அலுவலர் (mutawallis), 6 மாதங்களுக்குள் சொத்து விவரங்களை பதிவேற்ற வேண்டும். அரசு தணிக்கை செய்யும்.
Similar News
News March 11, 2026
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

தூத்துக்குடியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் ஆகியவை இணைந்து வரும் 13-ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வைத்து நடத்த உள்ளது. தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ள இந்தமுகாமில் படித்த வேலையில்லாத இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 11, 2026
வங்கி கணக்கில் மேலும் ₹1,000.. ரங்கசாமி அறிவித்தார்

புதுச்சேரியில் மார்ச் 9-ம் தேதி குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ₹5,000 உரிமைத் தொகை வரவு வைக்கப்பட்டது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு ₹1,000 வழங்கும் திட்டத்தை CM ரங்கசாமி அறிவித்துள்ளார். அதன்படி, புத்தகப் பை, காலணி வாங்குவதற்காக 80,000 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, பெற்றோர்களின் வங்கி கணக்கில் ₹1,000 டெபாசிட் செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்திற்கும் இத்திட்டம் வேண்டுமா?
News March 11, 2026
BIG NEWS: பெட்ரோலுக்கும் தட்டுப்பாடா.. அடுத்தடுத்து ஷாக்

கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு பிரச்னையால் மக்கள் விழிபிதுங்கி நிற்கின்றனர். இந்நிலையில், தமிழகத்தின் பெட்ரோல் கையிருப்பு இம்மாதம்(மார்ச்) வரை மட்டுமே இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். பெட்ரோல் தட்டுப்பாடு தற்போதுவரை இல்லை எனக் குறிப்பிட்ட அவர், அச்சம் காரணமாகவே பலரும் பெட்ரோலை கேன்களில் வாங்கி கையிருப்பு வைத்து வருவதாகத் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னை எப்போது முடியுமோ?


