News February 12, 2025
BLOOD MOON பார்க்கனுமா?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739361357962_1246-normal-WIFI.webp)
இந்தியாவில் தெரியக்கூடிய அடுத்த முழு சந்திர கிரகணம் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி நிகழவுள்ளது. அன்றைய தினம், பூமியில் நிழலால் நிலவு ரத்த நிறத்தில் தென்படும். இந்த முழு கிரகணத்தை இந்தியாவில் இருந்து வெறும் கண்களால் பார்க்கலாம். சென்னையில் இரவு 11 மணிக்கு தொடங்கும் முழு கிரகணம், நள்ளிரவு 12.22 வரை நீடிக்கும். பகுதி கிரகணம் இரவு 8.58க்கு தொடங்கி நள்ளிரவு 2.25 மணி வரை நீடிக்கும்.
Similar News
News February 13, 2025
நடிகருக்கு பெண் தொடர்பு: கலங்கி நின்ற பிரபல நடிகை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739376209257_347-normal-WIFI.webp)
ஒருகாலத்தில் தீவிரமாக காதலித்து வந்த நடிகை மனிஷா கொய்ராலாவும், ‘காலா’ பட வில்லன் நானா படேகரும் பிரிந்த கதை மீண்டும் வைரலாகி வருகிறது. ஏற்கெனவே திருமணமான நானா படேகர், தன்னுடன் நடித்த ஆயிஷா ஜுல்கா என்ற நடிகையுடனும் தொடர்பிலிருந்த போது, மனிஷாவிடம் ஒருநாள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கிறார். வெறுத்துப்போன மனிஷா, ‘ஒழிஞ்சு போ…’ என்று சொல்லி, அன்றே படேகரை விட்டுவிலகி பழகுவதை நிறுத்திக் கொண்டாராம்.
News February 13, 2025
தாமரை மலர்வதை யாராலும் தடுக்க முடியாது: தமிழிசை
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_82024/1724147305814-normal-WIFI.webp)
தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என தமிழிசை தெரிவித்துள்ளார். பட்ஜெட் விளக்க கூட்டத்தில் பேசிய அவர், வரும் தேர்தலில் வென்று, தமிழகத்தை காவி நிச்சயம் ஆளும் என்றார். தமிழகத்தில் பெரியார் தமிழை வளர்க்கவில்லை என்றும், பெரியாழ்வார் வளர்த்த தமிழ்தான் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்துக்கான ஆட்சியை அகற்றிவிட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்காக நடைபெறும் ஆட்சி விரைவில் அமையும் என்றும் கூறியுள்ளார்.
News February 13, 2025
எவ்வளவு நேரம் தூங்காமல் இருக்கலாம்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739378189923_1246-normal-WIFI.webp)
சராசரி மனிதனுக்கு 7 முதல் 9 மணி நேர தூக்கம் தேவை. ஆனால், 24 மணி நேரத்திற்கு மேல் தூங்காமலே இருப்பது மிகவும் சிரமம். தொடர்ந்து 36 மணி நேரங்கள் தூங்காமல் இருந்தால், தீவிர பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்கின்றனர் டாக்டர்கள். இருப்பினும், 1963ஆம் ஆண்டு ராண்டி கார்ட்னர் என்பவர் தொடர்ந்து 11 நாள்கள் தூங்காமல் இருந்தார். ஆனால், இது விபரீத முயற்சி என்கிறது மருத்துவ உலகம்.