News April 26, 2024
பணியில் இருந்து ஓய்வு பெற விருப்பமா?

தனியார் நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வூதியம் என்பது கனவுதான். பெரும்பாலானவர்கள் பணத்தைச் சேமித்து வைத்து விரைவாக ஓய்வுபெற நினைக்கிறார்கள். அப்போது, எவ்வளவு தொகை இருந்தால் பணியில் இருந்து ஓய்வு பெறலாம் என்ற கேள்வி எழும். இதற்குப் பொருளாதார வல்லுநர்கள் 25X ஓய்வூதிய விதியைப் பயன்படுத்தக் கூறுகிறார்கள். அதாவது, ஆண்டுச் செலவில் 25 மடங்குத் தொகை கையில் இருந்தால் நீங்கள் ஓய்வு பெறலாம்.
Similar News
News August 24, 2025
₹1,000 மகளிர் உரிமைத் தொகை.. தமிழக அரசு புதிய தகவல்

ஆக.28-ம் தேதியுடன் ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் தொடங்கப்பட்டு 45 நாள்கள் நிறைவடைகிறது. இதனால், முதல் வாரத்தில் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்தவர்கள், தங்களின் விண்ணப்ப நிலையை அறிய ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், மனுக்கள் மீதான பரிசீலனை முடிந்து படிப்படியாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், இன்னும் 4 நாள்களுக்குள் நல்ல செய்தி வரப் போகிறதாம்.
News August 24, 2025
இன்று இரவு 7 மணிக்கு தயாரா இருங்க!

சிவகார்த்திகேயன்- ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் ‘மதராஸி’ படத்தின் டிரெய்லர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ருக்மணி வசந்த் ஹீரோயினாக நடித்துள்ள படத்தில், வித்யூத் ஜம்வால் வில்லனாக மிரட்டவுள்ளார். ஆக்சன் பின்னணியில் உருவாகி இருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இன்று சென்னை தனியார் கல்லூரியில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது.
News August 24, 2025
இனி வானவில் பார்க்கமுடியாதா? ஆய்வில் பகீர்

இந்தியாவில் இனி வானவில்லை பார்ப்பது அரிது என புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் தற்போது ஆண்டுக்கு 117 வானவில் நாள்கள் உள்ள நிலையில், 2,100-க்குள் இது 4–5% அதிகரிக்குமாம். ஆனாலும், காலநிலை மாற்றத்தால் மக்கள் வசிக்கும் இடங்களில் வானவில் தோன்றுவது குறையும் எனவும், இமயமலை போன்ற குளிர்ச்சியான மலைப்பகுதிகளில் அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எப்போ கடைசியா வானவில் பார்த்தீங்க?