News November 27, 2024

கத்தி முனையில் நடக்கிறோம்: SC தலைமை நீதிபதி கருத்து

image

நீதிபதிகளின் பணி கத்தி முனையில் நடப்பது போன்றது என்று சுப்ரீம் கோர்ட் (SC) தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தெரிவித்துள்ளார். நீதிபதிகள் பிறப்பிக்கும் ஒவ்வொரு தீர்ப்பிலும் உரிமையும், கடமையும் சமமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். வழக்கில் வெற்றி பெற்றவர்கள் கொண்டாட்டத்தில் திளைக்கும் வேளையில், தோற்றவர்களிடம் இருந்து விமர்சனங்கள் வருவது வழக்கம்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News August 19, 2025

மயில்சாமி அண்ணாதுரையை வைத்து தேர்தல் கணக்கு?

image

து.ஜனாதிபதி வேட்பாளராக மயில்சாமி அண்ணாதுரையை INDIA கூட்டணி அறிவித்தால் அது தேர்தல் நோக்கம் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். NDA கூட்டணி தமிழர் ஒருவரை வேட்பாளராக அறிவித்த பிறகு, INDIA கூட்டணியும் தமிழரை அறிவித்தால் அது போட்டியாகவே இருக்கும் என்றார். மேலும், துணை ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்புக்கும் தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கும் தொடர்பு இல்லை என அவர் மறுத்துள்ளார்.

News August 19, 2025

சிவாஜிக்கு பிறகு வடிவேலு தான் சிறந்த நடிகர்: வெற்றிமாறன்

image

தமிழ் சினிமாவில் சிவாஜிக்கு பிறகு மிகப்பெரிய ஒரிஜினல் நடிகன் என்றால் அது வடிவேலு தான் என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். வடிவேலுவுக்கு படிப்பும், சினிமா பின்புலமும் கிடையாது, ஆனால் ஒவ்வொரு படத்திலும் கேரக்டராகவே வாழ்வார் என அவர் கூறியுள்ளார். மேலும், வடிவேலு வெறும் காமெடி நடிகர் கிடையாது, கதாபாத்திரமாகவே மாறக்கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார்.

News August 19, 2025

அதிமுக பொ.செயலாளர் வழக்கு.. HC உத்தரவு

image

அதிமுக பொதுச்செயலாளராக தேர்வானதை எதிர்த்த வழக்கை நிராகரிக்க கோரி EPS மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை சென்னை உரிமையியல் கோர்ட்டின் நீதிபதி தள்ளுபடி செய்திருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து EPS சென்னை HC-ல் மனுதாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம், உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை செப்.3ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

error: Content is protected !!