News May 16, 2024
மாற்றத்தை உணர அதிகாலையில் எழுங்கள்..!

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரம் உறங்குவதும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதால், மூளை நரம்புகள் சீராகச் செயல்படும். இதனால், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறையும். அந்நாளை சிறப்பாக திட்டமிட அதிக நேரம் கிடைக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் ஒதுக்க முடியும்.
Similar News
News November 17, 2025
இன்னும் 3 நாள்களில் புதிய கட்சி: மல்லை சத்யா

மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நவ.20-ல் புதிய கட்சியை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், சரியான நேரத்தில் தவறான முடிவை எடுக்கும் தலைவராக வைகோ இருந்தார் என்றும் சாடினார். மேலும், 2016 தேர்தலின்போது மக்கள் நலக் கூட்டணி உருவானதில் பல ரகசியங்கள் உள்ளதாக கூறிய அவர், அதை தற்போது சொல்ல முடியாது என சஸ்பென்ஸ் வைத்துள்ளார்.
News November 17, 2025
சவுதி அரேபியா விபத்து: ஒருவர் மட்டும் உயிர் பிழைத்த அதிசயம்

சவுதி அரேபியா பேருந்து விபத்தில் <<18308684>>42 பேர்<<>> உயிரிழந்தனர். ஆனால் இதில், அதிர்ஷ்டவசமாக முகமது அப்துல் சோயிப் என்ற ஓட்டுநர் மட்டும் உயிர்பிழைத்துள்ளார். இக்கட்டான நிலையில், அவர் சிகிச்சையில் உள்ளார். இப்படி ஒரு அதிசயம் நிகழ்ந்த அதேநேரம், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரும், மற்றொரு குடும்பத்தைச் சேர்ந்த 7 பேரும் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Sad..
News November 17, 2025
BREAKING: ஷேக் ஹசீனா குற்றவாளி: தீர்ப்பு வெளியானது

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளி என அந்நாட்டின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ICT) தீர்ப்பளித்துள்ளது. தற்போது நீதிபதி தீர்ப்பை வாசித்து வருகிறார். விரைவில் தண்டனை என்னவென்று தெரியவரும். ஹசீனா ஆட்சியில், கடந்த ஆண்டு நடந்த மாணவர் போராட்டத்தை ஒடுக்க அவர் கடும் வன்முறையை கையாண்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் ஹசீனா மற்றும் 2 உயர் அதிகாரிகள் மீது சுமத்தப்பட்டுள்ளன.


