News May 16, 2024
மாற்றத்தை உணர அதிகாலையில் எழுங்கள்..!

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரம் உறங்குவதும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதால், மூளை நரம்புகள் சீராகச் செயல்படும். இதனால், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறையும். அந்நாளை சிறப்பாக திட்டமிட அதிக நேரம் கிடைக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் ஒதுக்க முடியும்.
Similar News
News October 19, 2025
சிக்மண்ட் பிராய்ட் பொன்மொழிகள்

*நாம் ஒருவரையொருவர் தற்செயலாகத் தேர்ந்தெடுப்பதில்லை. நம் ஆழ் மனதில் ஏற்கனவே இருப்பவர்களை மட்டுமே நாம் சந்திக்கிறோம். *வரலாறு என்பது வெறுமனே புதிய மக்கள் பழைய தவறுகளைச் செய்வதுதான். *உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் இருந்து உங்கள் பலம் வெளிவரும். *தனக்குத்தானே முற்றிலும் நேர்மையாக இருப்பது ஒரு நல்ல பழக்கமாகும். *ஒருவரிடம் அவர் விரும்பியது இல்லாதபோது, தன்னிடம் இருப்பதை அவர் விரும்ப வேண்டும்.
News October 19, 2025
கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது பயமாக உள்ளது: SKY

டி20 கேப்டனாக கில் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியான நிலையில், அது குறித்து சூர்யகுமார் யாதவ் கருத்து தெரிவித்துள்ளார். கேப்டன்ஷிப்பை பறிகொடுப்பது என்பது அனைவருக்குமே பயத்தை கொடுக்கு எனவும், ஆனால் அந்த பயம் தான், சிறப்பாக விளையாட தூண்டும் உந்துசக்தியாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், நேர்மையும், கடின உழைப்பும் இருந்தால் நடக்க வேண்டியது நடக்கும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
பெற்றோரை கவனிக்காத ஊழியர்களுக்கு சம்பளம் கட்!

அன்பையும், பாசத்தையும் ஊட்டி தோளில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை கடைசி காலத்தில் கைவிட்டு செல்வது வாடிக்கையாகி வருகிறது. இதற்கு முடிவுகட்ட தெலங்கானா அரசு முடிவு செய்துள்ளது. வயதான பெற்றோர்களை கவனிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10-15% பிடித்தம் செய்யப்பட்டு, பெற்றோருக்கு வழங்கப்படும் என அம்மாநில CM ரேவந்த் ரெட்டி அறிவித்துள்ளார். அவரது இந்த செயலை எப்படி பார்க்கிறீர்கள்? கமெண்ட் பண்ணுங்க.