News May 16, 2024

மாற்றத்தை உணர அதிகாலையில் எழுங்கள்..!

image

அதிகாலையில் கண் விழிப்பதும், இரவு சீக்கிரம் உறங்குவதும் உடலுக்கு பல்வேறு நன்மைகளை ஏற்படுத்தும் என ஆய்வுகளில் நிரூபணமாகியுள்ளது. சூரிய உதயத்திற்கு முன் எழுவதால், மூளை நரம்புகள் சீராகச் செயல்படும். இதனால், தன்னம்பிக்கையும், உற்சாகமும் அதிகரிப்பதோடு, மன அழுத்தம், ரத்த அழுத்தம் குறையும். அந்நாளை சிறப்பாக திட்டமிட அதிக நேரம் கிடைக்கும் என்பதால், உடற்பயிற்சி செய்ய போதுமான நேரம் ஒதுக்க முடியும்.

Similar News

News December 29, 2025

பொங்கல் பரிசு பணம்.. அரசு தரப்பு வெளியிட்டது

image

<<18690697>>பொங்கல் பரிசுத் தொகுப்பு <<>>வரும் 10-ம் தேதிக்குள் வழங்கப்படும் என அமைச்சர் காந்தி கூறியிருந்தார். அத்துடன் ₹3,000 வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்த நிலையில், வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்யும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. அதேநேரம் பொங்கல் பண்டிகை செலவுகளை கருதி, உரிமைத் தொகை ₹1,000-ஐ ஜன.9 (அ) 12-ம் தேதியே வங்கிக்கணக்கில் செலுத்த வாய்ப்புள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

News December 29, 2025

மார்கழி திங்கள் ஸ்பெஷல் கோலங்கள்!

image

யோகா போல, கோலம் போடுவதும் உடல்நலன் காக்கும் கலைதான். குனிந்து, வளைந்து, அமர்ந்து கோலம் போடுவது ஆசனம் செய்வது போல்தான் இருக்கும். அதிகாலையில் எழுந்து கோலம் போட்டால், அந்த நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அந்த வகையில், மார்கழி திங்களன்று வீட்டு வாசலில் போடக்கூடிய கோலங்களை போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். Swipe செய்து பார்த்து அவற்றை வீட்டில் முயற்சிக்கவும்.

News December 29, 2025

அதிக கடனில் தமிழகம்.. புயலை கிளப்பிய காங். நிர்வாகி

image

இந்தியாவிலேயே TN தான் அதிக நிலுவைக்கடன் வைத்துள்ளது என காங்., நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி கூறியுள்ளார். கடனில் இருந்த TN-ஐ வளர்ச்சியடைந்த மாநிலமாக திமுக மாற்றியதாக கனிமொழி கூறியிருந்தார். அதை X-ல் சுட்டிக்காட்டி, 2010-ல் உபி., தமிழகத்தை விட இருமடங்கு கடன் வைத்திருந்ததாகவும், ஆனால் தற்போது உபி.,-ஐ விட TN அதிக கடனில் உள்ளதாக தெரிவித்துள்ளார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!